Tuesday 4 October 2011

பண்டைய தமிழனின் அரும்பெருஞ்சாதனை காலநீட்டிப்பு கணிதம்

,

செயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டு கூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர்


பண்டைய வானவியலில் ஒரு நாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர் . ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிப்பதாகும் ஆக 60 நாளிகை என்பது 1440 நிமிடங்களை குறிப்பதாகும் . நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக்கிறோம் அப்படியெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள் 24*60=1440  ஆகும் .

வருடத்தின் சில நாட்களில் பகல் நீண்டு இருக்கும் சில நாட்களில் இரவு நீண்டு இருக்கும் என நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்து இருப்போம் ஆனால் நம்முடைய முன்னோர்கள் செயற்கைகோள் உதவியில்லாமலும் தொலைக்காட்சிகளின் துணையுமில்லாமலும் 12 மாதங்களையும்  பிரித்து எவற்றில் பகல் நீடிக்கும் எவற்றில் இரவு நீடிக்கும் என அறிதியிட்டு கூறியுள்ளனர் ஆகவே தமிழன்தான் பகல்இரவு நீட்டிப்பு அறிவியலை முதன் முதலில் உலகிற்கு கூறினான்.

சரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல்இரவு நாழிகையை  எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்

      “ சித்திரையும் ஐப்பசியும் சீரொக்கும் சித்திரைவிட்டு
       ஐப்பசிமுன் னைந்தும் அருக்கேறும்ஐப்பசிக்குப்
       பின்னைந்து மாதம் பிசகாமல் இரவேறும்
       மின்னே விடுபூ முடி


சித்திரை மாதமும் ஐப்பசி மாதமும் சீரொக்கும் அதாவது பகல்இரவு நாழிகைகள் சமமாக( பகல்=30, இரவு =30 ) இருக்கும்
ஐப்பசிக்கு முன் ஐந்தும் அருகேறும் அதாவது ஐப்பசிக்கு முன் உள்ள வைகாசி,ஆனி,ஆடி,ஆவணி,புரட்டாசி ஆகிய ஐந்து மாதங்களில் பகல் நீடிக்கும்
ஐப்பசிக்கு பின் ஐந்து மாதம் பிசகாமல் இரா ஏறும் அதாவது ஐப்பசிக்கு பின் உள்ள கார்த்திகை , மார்கழி, தை, மாசி , பங்குனி ஆகிய மாதங்களில் இரவு நீடிக்கும்
பாடலின் கடைசி வரி " விடுபூ முடி " மிக மிக முக்கியமான வரியாகும் இந்த வரியினை அடிப்படையாக கொண்டு வாக்கிய கணித முறை என்னும் புதிய முறை தோன்றியது இந்த வாக்கிய கணித முறை தான் சோதிடவியலுக்கு அடிப்படையானதாகும்.

வாக்கிய கணித முறை என்பது வாக்கியத்தின் முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை கணக்கிட வேண்டும் ஒவ்வொரு எழுத்துக்கும் 1/4 கால அளவு கொடுக்க வேண்டும் 

பகல் நீட்டிப்பை காண
வி - டு - பூமுடி எனும் ஐந்து வார்தைகளை எடுத்துக்கொள்வோம்     வி  என்பது வைகாசி
டு என்பது ஆனி
பூ என்பது ஆடி
மு என்பது ஆவணி
டி என்பது புரட்டாசி
இது போலவே வி - டு - பூமுடி எனும் அதே ஐந்து வார்தைகளை கொண்டு இரவு நீட்டிப்பு மாதங்களுக்கு கொடுத்து இரவு நீட்டிப்பும் அறியலாம்
மாதிரிக்காக வைகாசி மாதத்தின் பகல் நீட்டிப்பை காணும் முறை
வி என்ற எழுத்தின் தொடக்கம் ஆகும் எனவே
= 1/4 நாழிகை
வா= 1/4 நாழிகை
வி=1/4 நாழிகை  ஆக மொத்தம் கிடைப்பது  ¾  நாழிகை பகல் நீடிக்கும்    3/4 நாழிகை என்பது 18 நிமிடத்திற்கு சமம்

இது போல வி - டு - பூமுடி ஆகிய வாக்கியங்களின் முதல் எழுத்து முதல் கடைசி எழுத்து வரை கணக்கிட்டால் கிடைப்பது

பகல் நீட்டிப்பு
வைகாசி 3/4 நாழிகை  = 18 நிமிடம் 
ஆனி 1 1/4 நாழிகை   = 30 நிமிடம் 
ஆடி 1 1/2 நாழிகை    = 36 நிமிடம் 
ஆவணி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
புரட்டாசி 3/4 நாழிகை  = 18 நிமிடம் 

இரவு நீடிப்பு
கார்திகை 3/4 நாழிகை = 18 நிமிடம் 
மார்கழி 1 1/4 நாழிகை  = 30 நிமிடம் 
தை 1 1/2 நாழிகை      = 36 நிமிடம் 
மாசி 1 1/4 நாழிகை     = 30 நிமிடம்
பங்குனி 3/4 நாழிகை   = 18 நிமிடம் 

3 comments to “பண்டைய தமிழனின் அரும்பெருஞ்சாதனை காலநீட்டிப்பு கணிதம்”

  • 4 October 2011 at 22:11

    ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதியை அறிந்து கொள்ள எவ்வாறு கணக்கிடுவது?

  • 5 October 2011 at 00:22

    தங்கள் தகவல் சுவையாக இருந்தது,
    தங்களின் கருத்தில் ஒருசிலவற்றில் மாறுபடுகிறேன்.

    நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60- நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறுபெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளார்கள்.

    தமிழ் திங்கள் (மாதம்)
    “““““““““““““““`
    பன்னிரண்டு ஓரை[ராசி]களின் பெயர்களே பனனிரண்டு திங்களின் பெயர்களாக
    வழங்கி வந்தன.

    அவை:–
    1. சுறவம் (தை)
    2. கும்பம் (மாசி)
    3. மீனம் (பங்குனி)
    4. மேழம் (சித்திரை)
    5. விடை (வைகாசி)
    6. ஆடவை (ஆனி)
    7. கடகம் (ஆடி)
    8. மடங்கல் (ஆவணி)
    9. கன்னி (புரட்டாசி)
    10. துலாம் (ஐப்பசி)
    11. நளி (கார்த்திகை)
    12. சிலை (மார்கழி)

    இப்படியாக நாம் பின்பற்றிய தமிழ் திங்கள் காலபோக்கில் ஆட்சி மாற்றத்தால் வடமொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டன.

    சிலபேர் ஆங்கிலத்தை எதிர்ப்பதாக சொல்லிகொண்டு தமிழை வளர்க்கிறேன் என்று சொல்லிகொண்டு தங்களை அறியாமல், சிலபேர் நன்கு தெரிந்தே சமற்கிருததுக்கு துணைபோகிறார்கள்.
    தமிழின் தனித்துவத்தை உணர்ந்து தமிழை பரப்புரை செய்வதே சாலச் சிறந்தது.

    தோழரே இது தங்களின் கருத்துக்கு எதிரானதாக எண்ண வேண்டாம்.
    நம் கருத்து சண்டைகள், பரிமாற்றங்கள் நம் மொழியின் சிறப்பை, பண்பை வளர்க்க உதவ வேண்டுமே தவிர தேவையில்லாத மனகசப்பை வளர்க்க அல்ல.

  • 5 October 2011 at 12:33
    Guru says:

    அன்புள்ள புகல் அவர்களுக்கு தமிழர்கள் பிரித்த சிறு பொழுதுகள் பற்றி அறிவேன் ஆயினும் கால நீட்டிப்பு பதிவுக்கு அவைகள் தேவையில்லை என விட்டு விட்டேன் ஆனால் நாம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என சொல்லிக்கொண்டு மாதங்களை மட்டும் வடமொழி கலந்து கூறிக்கொண்டு இருக்கிறோமே என எனக்கு ஒரு வருத்தம் இருந்தது நீங்கள் தான் எனக்கு புரிய வைத்துள்ளீர்கள் உங்களின் கருத்துக்களுக்கு பெருமிதத்தோடு தலை வணங்குகிறேன் .

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates