Saturday 31 December 2011

விரல் நுனியில் திருக்குறள் – தமிழ் மென்பொருள்

,

நண்பர்களே நம் ஒவ்வொருவரின் கணினியிலும் கட்டாயம் இருக்க வேண்டிய  ஒரு எளிய freeware மென்பொருள் விரல் நுனியில் குறள் . இதில் அனைத்து குறள்களுக்கும் உரிய விளக்கங்களை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பெற்றுக்கொள்ளலாம் .அதிகாரங்களின் அடிப்படையிலோ அல்லது எத்தனையாவது குறள் வேண்டுமோ அதை தேர்வு செய்யவும் மெனு உள்ளது. இந்த சிறிய மென்பொருளை  இன்ஸ்டால் செய்யும் அவசியம் இல்லை .exe வடிவில் உள்ள இந்த மென்பொருளை இயக்கினாலே போதும்  மவுஸ் மூலம் ரைட்கிளீக் செய்வதின் மூலம் மெனுக்களை தேர்வு செய்யலாம் இதை உருவாக்கியது அன்பு நண்பர் இளங்கோ சம்பந்தம் . இனைய தேடலில் எனக்கு கிடைத்த இந்த மென்பொருள் உங்களுக்கும் பயன்படும் என்பதால் பதிவிடுகிறேன்  கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டியை இயக்கி பயன்பெறுங்கள்.



டிஸ்கி

அன்புள்ளம் கொண்ட பதிவுலக சொந்தங்களின் இல்லங்களிலும் , உள்ளங்களிலும் புதிய வருடம் மகிழ்ச்சிகளையும் சாதனைகளையும் கொண்டுவரட்டும் உங்களுடனான  நட்பு பயனத்தில் புதிய வருடத்தில் கைகோர்த்து நடப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

நேசம்மிகுந்த நெஞ்சமுடன்
.குரு 

Friday 30 December 2011

அட்டகாசமான ஆயிரம் சாப்ட்வேர்கள் பதிவிறக்க ஆசையா ?

,

நண்பர்களே நமக்கு மிக மிக தேவையான ஆயிரம் சாப்ட்வேர்களின் நேரிடையான லிங்க்குகள் அடங்கிய PDF வடிவ மென்நூலை பதிவிட்டு உள்ளேன் இந்த மென்நூலில் உங்களுக்கு தேவையான சாப்ட்வேரின் லிங்கை கிளிக் செய்தால் போதும் நேரிடையாக டவுன்லோட் ஆகிவிடும் . கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம் பதிவிறக்கி பயன்பெறுங்கள்



அழகுதமிழில் வின்டோஸ் XP இன்ஸ்டால் & பார்ட்டீஸியன் செய்யும் முறை

,

கணினி இயக்க தெரிந்த நமக்கு கணினிக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது  வின்டோஸ் இயங்க மறுத்தாலோ நாம் உடனே சர்வீஸ் சென்டரை நாடுவோம். வின்டோஸ் XP இன்ஸ்டால் செய்யும் முறை பற்றி தமிழில் வெளிவந்த கணினி சார்ந்த புத்தங்களிலோ முழுமையான,தெளிவான விளக்கங்களோ இல்லை இக்குறைபாட்டை நீக்க  வின்டோஸ் XP இன்ஸ்டால் செய்யும்  வழி முறைகள் ஸ்கீரீன் ஷாட் புகைப்படங்களுடன் படிப்படியாக விளக்கப்பட்ட மென்நூலை பதிவிட்டு உள்ளேன் கீழே உள்ள சுட்டியின் மூலம் பதிவிறக்கி கொள்ளுங்கள். உங்களின் கணினி ஏதாவது பிரச்சனை செய்தால் மென்நூலில் கொடுக்கப்பட்ட வழிமுறையின்படி வின்டோஸ் CD   ( கூகிள் அல்லது டோரன்ட் இல்  தேடி பாருங்கள் கிராக் வெர்ஸன் வின்டோஸ் XP கிடைக்கிறது அதை CD அல்லது DVDயில் பதிந்து கொள்ளுங்கள் ) மூலம் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்

Wednesday 28 December 2011

MP3 வடிவில் தேசியகீதம் மற்றும் தமிழ்தாய் வாழ்த்து

,

நண்பர்களே நம் மொபைலில் அவசியம் இருக்க வேண்டியது  தேசியகீதம் மற்றும் தமிழ்தாய் வாழ்த்து ஆகும் ஆனால் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் நம்மில் எத்தனை பேரிடம் இந்த பாடல்கள் இருக்கிறது என்று  ? 
கீழே உள்ள சுட்டியை இயக்கி இந்த இரு பாடலையும் பதிவிறக்கி பயன்படுத்துங்கள் .


ஜெய்ஹிந்

Thursday 22 December 2011

டேய் ரமேஷ் டேய் சுரேஷ் மீதி ஒரு ரூபாய் எங்கடா போச்சு ?

,

ரமேஷும் சுரேஷும் நெருங்கிய நண்பர்கள் அவர்கள் இருவரும் ராமுவிடம் 50 ரூபாய் கொடுத்து ஒரு விளையாட்டு பொம்மை வாங்கி வர சொன்னார்கள் கடைகாரர் பொம்மைக்கு 5 ரூபாய் தள்ளுபடிஎன்று சொல்லி விட்டு 5 ரூபாயை ராமுவிடம் திருப்பி கொடுத்துவிட்டார் ராமுவோ இரண்டு ரூபாய்க்கு சாக்லேட் வாங்கி சாப்பிட்டுவிட்டு மீதி 3 ரூபாயை ரமேஷுடமும் சுரேஷுடமும் கொடுத்து விட்டான் ரமேஷும் சுரேஷும் ஆளுக்கு ரூ 1.50 எடுத்துக்கொண்டார்கள் ஆக அவர்கள் பொம்மைக்கு செலவு செய்தது தலா 23.50.  பொம்மை வாங்க ரமேஷ் செலவு செய்த 23.50 ம் பொம்மை வாங்க சுரேஷ் செலவு செய்த 23.50 ம் கூட்டினால் வருவது 47 ரூபாய் . ராமு சாக்லேட் சாப்பிட்ட 2 ரூபாயும்  சேர்த்தினால் கிடைப்பது 49 ரூபாய் அப்படி எனில் மீதி 1 ரூபாய் எங்கே ?
விடை

பொம்மை வாங்க ரமேஷும் சுரேஷும் செலவு செய்த 23.50 ரூபாயிலே ராமு சாப்பிட்ட இரண்டு ரூபாயும் அடக்கம் ஆக மீண்டும் சாக்லேட் செலவை சேர்த்தது தவறு என்னங்க கொஞ்சம் புரிரியுது ஆன தெளிவா புரியலைனு சொல்றீங்களா ?
பொம்மை வாங்க ரமேஷ் கொடுத்தது 23.50+திரும்பபெற்றது 1.50=25
பொம்மை வாங்க சுரேஷ் கொடுத்தது 23.50+திரும்பபெற்றது 1.50=25
மொத்தத்துல 50 ரூபாய் சரியா வருதுங்களா ?

Sunday 18 December 2011

நவரத்தின தகுதி நிறுவனங்கள் என்றால் என்ன ?

,

இந்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு அதிக அளவிலான நிதி மற்றும் கொள்கை சுதந்திரம் வழங்குவதே நவரத்தின தகுதி இந்திய அரசின் பப்பிளிக்என்டர்பிரைசஸ் துறையே இந்த நவரத்தின தகுதியை வழங்குகிறது இந்த தகுதியை பெறும் நிறுவனங்கள் 1000 கோடி ரூபாய் வரை அரசு அனுமதி இல்லாமல் இந்தியாவிலோ வெளிநாட்டிலோ எந்தவிதமான திட்டங்களிலும் முதலீடு செய்யலாம்  மேலும் வெளிநாடுகளுடன்  கூட்டுத்தொழில் தொடங்கலாம்.
பாரத் எலக்ட்ரானிக்ஸ், பாரத் ஹெவி எலக்ட்ரிகல் , பாரத்பெட்ரோலியம்,  கோல் இந்தியா, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, இந்துஸ்தான் ஏரோநாடிக்கல்  போன்ற  பதினெட்டு இந்திய பொதுத்துறை  நிறுவனங்கள் நவரத்தின தகுதியை பெற்று உள்ளன 

Saturday 17 December 2011

செல்லாத வாக்காய் போன குருட்டுதமயந்திகள்

,


தேர்தலில்
செல்லாத வாக்குகள்
மக்கள்

********************************************************
திருட்டு நளனுக்கு
குருட்டு தமயந்திகள்
மாலையிட்டனர்
மந்திரி
*****************************************************

ஐந்தாண்டு ஆட்டம்
இந்த முறையும்
ராஜா ராணிகள்
உனை வெட்டி
ஜெயித்திருப்பார்கள்
மீண்டும் நீ
தயாராவாய்
அடுத்த ஆட்டத்திற்கு

Friday 16 December 2011

உயிரை உருக்கும் இரசாயனம்

,

கனவுகளை
நெசவு
செய்யச்சொல்லும்
உன்
பார்வைகள்
**********************************************************
உயிரை உருக்கும்
இரசாயனம்
உன்
நினைவுகள்
************************************************************
மௌனத்தில்
புதைந்திருக்கும்
அழுகையை கிழிக்கும்
கத்தியாய்
உன்
வார்தைகள்
*****************************************************


எளிய தமிழில் PDF வடிவில் JAVA மென்நூல்

,

கணினி தொழில்நுட்பத்தில் புதிய மலர்ச்சியை ஏற்படுத்திய மொழி JAVA  ஆகும் .தற்போது கணினியையும் தாண்டி மொபைல் தொழில்நுட்பத்தில் அளவிடமுடியாத சாதனைகளை படைத்துவருவது JAVA ஆகும்  . அத்தகைய வியத்தகு மொழியை எளிய தமிழில் PDF வடிவில் மென்நூலாக நண்பர் திரு பாக்கியநாதன் படைத்துள்ளார். இந்நூலின் முழு பதிப்புரிமையும் இதை படைத்த எழுத்தாளரையே சாரும்  இணைய தேடலில் எனக்கு கிடைத்த  இந்த மென்நூல்  வேறு சிலரின் வலைப்பூவிலும் கிடைக்கிறது  இருப்பினும் அனைவரையும்  சென்று  சேர வேண்டும் என்பதால் நானும் பதிவிடுகிறேன்  இந்நூலுக்கு உரியவர் ஆட்சேபம் தெரிவித்தால் என்னுடைய வலையில் இருந்து நீக்கி விடுவேன்  . எளிய தமிழில் JAVA மென்நூலை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள சுட்டியை இயக்குங்கள்


Monday 12 December 2011

சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?

,

பண்டைய காலம் முதல் மதவழிபாட்டிற்கும் மருத்துவ பயன்பாட்டிற்கும் சாம்பிராணி பயன்பட்டு வருகிறது . சாம்பிராணி எதில் இருந்து பெறப்படுகிறது  என்று என்றாவது  நீங்கள் யோசித்தது  உண்டா ?

மாவீரன் மகா அலெக்ஸான்டர் சிறு வயதில் தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டில் இடம் கல்வி பயின்று கொண்டு இருக்கும் போது தன்னுடைய ஆசிரியருக்கு சாம்பிராணி தேவைப்பட்டதை உணர்ந்தார் பின்பு மாவீரனாக உலகை வெல்ல ஆரம்பித்த நேரத்தில் மேற்கத்திய நாடுகளின் படையெடுப்பின் போது மூட்டை மூட்டையாக சாம்பிராணியை தன்னுடைய  ஆசிரியர் அரிஸ்ட்டாட்டிலுக்கு அனுப்பி வைத்தார்.

சாம்பிராணி ஆனது பாஸ்வெல்லியா செர்ராட்ட(Boswellia serrata)எனப்படும் தாவரகுடும்பத்தை சேர்ந்த  ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால் ஆகும் இது மிக மெதுவாக கடினமாகி ஒளிபுகும் தன்மையும் எளிதில் எரியும் தன்மையுடைய சாம்பிராணி ஆக மாறுகிறது. இவையை எரித்தால் மிகுந்த மணத்தை பரப்பும்
ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் குஜராத்,அஸ்ஸாம்,ராஜஸ்தான்,பீகார், ஒரிஸா, மற்றும் தமிழ்நாட்டில் அதிமாக காணப்படுகிறது .தமிழ்நாட்டில் குறிப்பாக கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் 500 மீ – 700 மீ உயரத்தில் காணப்படுகிறது மரமானது உறுதியானது ஆனால் எளிதில் அறுக்கவும் , இழைக்கவும் முடியும் இவ்வகை மரங்கள் தீக்குச்சிகள் தயாரிக்க பெரிதும் பயன்படுகின்றன . நவம்பர் மாதம் முதல் ஜூலை வரையிலான காலங்களில் பால் அதிகமாக வடியும் ஒரு மரத்திலிருந்து ஆண்டு ஒன்றிற்க்கு 1 கி.கி வரையில் சாம்பிராணி பெற முடியும்

சாம்பிராணி மருத்துவ பயன்கள்

ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) மரத்திலிருந்து கோந்தும் பெறப்படுகிறது இவையும் சாம்பிராணி போலத்தான் கோந்தை நீருடன் சேர்த்து பெண்டோஸ் சர்கரைகள் தயாரிக்கப்படுகிறது இது இருமல், காமாலை, நாள்பட்டபுண்கள், சொறி, சிரங்கு ,படர்தாமரை போன்றவற்றிற்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

சாம்பிராணியை ஆவியாக்கி போஸ்வெல்யா எண்ணை , டர்பெண்டைன் எண்ணை போல எண்ணை எடுக்கிறார்கள்  இதிலிருந்து வார்னிஷ் தயாரிக்கப்படுகிறது . சாம்பிராணி எண்ணை ஆனது சோப்பு தயாரித்தலிலும் பயன்படுகிறது
டிஸ்கி
என்னுடைய பள்ளி நாட்களில் சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள்  என பலரிடம் கேட்டு பார்த்தேன்  யாரிடமும் விடை கிடைக்காததால் அக்கேள்வியை மறந்தே போனேன் . தற்போது  ஒரு ஆசிரியராக பாடம் நடத்தும் போது சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் என்று என் மாணவன்  கேட்டதால் இப்பதிவை பதிவிடுகிறேன்

Sunday 11 December 2011

உயிர்கொல்லி ஆயுதம்

,

உன்னை
பார்துக்கொண்டுடிருக்கையில்
கிளம்பும் பேருந்துக்கு
தெரியாது.....
உன் கண்களை
கடைசியாய்
பார்பதென்பது
என்னை
நானே
சிலுவையில்
அறைந்து கொள்(ல்)வது என்று !

உயிர்த்திருத்தல்

,

அந்தி சாயும்
பொழுதுகளில்
மெல்ல கவிழும்
தனிமையினூடே
வந்து சேரும்
இயலாமையின் பரிதவிப்புகள்
சொல்லிப்போகும்
உயிர்த்திருத்தல் 
தீராத பெரும் சோகமென்று

Friday 9 December 2011

நீங்கள் பயன்படுத்தும் வெல்க்ரோ ஜிப்பின் அறிவியல் வரலாறு

,
மக்களின்  அன்றாட பயன்பாட்டிற்க்கு இருபதாம் நூற்றான்டு கொடுத்த அறிவியல் கொடை ஜிப்(Zip) எனப்படும் இழுப்பான் ஆகும்  இரண்டு துணிகளை  இணைக்க ஜிப் பயன்படுகிறது அறிவியல் மேலும் மேலும் வளர புதிய வகை ஜிப் கண்டுபிடிக்கப்பட்டது அதன்  பெயர் வெல்க்ரோ ஜிப் ஆகும் . இதில் ஒரு பக்கம்  குட்டி குட்டி வளையங்களுடனும் மறுபக்கம் பிளாஸ்டிக்கிலான கொக்கிகளும் உள்ளது  இரண்டையும் அழுத்தி இணைக்கும் போது ஒன்றுடன் ஒன்று சிக்கி கொள்கிறதுமேலும் அவற்றை இலுக்கும் போது பிரிந்து கொள்கிறது தற்போது கைப்பை , ஷூ , புத்தகப்பை , பைல்  என பல பொருள்களிலும்  இணைப்பானாக பயன்படுகிறது .

வெல்க்ரோ ஜிப் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு தற்செயலான நிகழ்ச்சி , ஸ்விஸ் நாட்டின் ஜார்ஜ் டி மெஸ்ட்ரால் என்ற பொறியாளர் தன்னுடைய செல்ல  நாயுடன் ஆல்ப்ஸ் மலையில் தன்னுடைய வழக்கமான  மலையேற்ற பயிற்ச்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பினார் தன்னுடைய நாயின் உடம்பிலும் தன்னுடைய பேன்ட்-சட்டையிலும் விதை கொக்கிகள்  ஒட்டி இருப்பதை கண்டார் அவற்றை  நுண்னோக்கி மூலம் ஆராய்ந்தார் . அவரின் மூளையில் திடீரென மின்னல் அடித்தது ஜிப்புக்கு போட்டியாக  பயன்படுத்த அதை விட எளிதான வெல்க்ரோ ஜிப்பின் அறிவியல் அடிப்படையை கண்டுகொண்டார்.

விதைகொக்கியை நுண்ணோக்கி மூலம் ஆராயும் போது குட்டி குட்டி வளையங்கள் ஒரு பக்கமும் மறுபக்கம் கொக்கிகள் இருப்பதும் கண்டுகொண்டார் இந்த கண்டுபிடிப்பை தன்னுடைய நண்பர்களிடம் சொன்ன போது ஜார்ஜ் டி மெஸ்ட்ராலை பயங்கரமாக கிண்டலடித்தார்கள் ஆனால் ஜார்ஜ் டி மெஸ்ட்ரால் மனம் தளரவில்லை  8 வருட கடின முயற்ச்சிக்கு பின் வெல்க்ரோ ஜிப்பினை கண்டுபிடித்தார்  உலகப்புகழ் அடைந்தார்
மக்களின் அன்றாட பயன்பாட்டில் வெல்க்ரோ ஜிப் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன . இராணுவத்தில் சைலன்ட் வெல்க்ரோ ஜிப்கள் பயன்படுத்தப்படுகிறது





டிஸ்கி
அன்புள்ள சகோ ஸ்டாலின் மீண்டும் பதிவிட ஆரம்பித்துவிட்டேன் கனிவான விசாரிப்புகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

Monday 28 November 2011

மனித உடம்பில் உள்ள பயோகிளாக் என்பது என்ன ?

,

            சிலர் உறங்க போகும் முன் அதிகாலையில் விரைவாக எழுந்திருக்க  அலாரம் வைத்துக்கொண்டு படுப்பார்கள்  நாளடைவில் அலாரம் தேவையில்லாமலே குறிப்பிட்ட நேரம் ஆனது எழுந்து கொள்வார்கள்  இதற்கான காரணம் மனிதரில் காணப்படும்  Bio clock System எனப்படும் உயிரியல் கடிகாரம் ஆகும் .   இந்த  உயிரியல் கடிகாரமானது சீரான இயக்கம் நடைபெற்றால் அதற்கு ஒத்திசைவாக  இயங்க ஆரம்பிக்கும் இந்த கால ஒழுங்கை பயாலஜிக்கல் ரிதம் என்று அழைக்கப்படுகிறது .
மனித உடம்பில் காணப்படும் Bio clock System அமைப்பை பற்றி பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஹால்பெர்க் என்ற  விஞ்ஞானி முதன் முதலில் கண்டுபிடித்தார் தினந்தோறும் ஒழுங்குபடுத்தும் கால அளவை circardian Rhythm   என்றும் ஒவ்வொரு மணிதோறும்  ஒழுங்குபடுத்தும் கால ஒழுங்கை chrno Biology Rhythm எனப்படும்
மனிதருக்கு மட்டுமில்லை விலங்குகள் , பறவைகள் போன்றவைகளிலும்   Bio clock System  காணப்படுகிறது இதனால்தான் கோழிகள் அதிகாலையில் தினமும் சரியாக கூவுகின்றன 

Sunday 20 November 2011

பூக்களில் இத்தனை நிறங்களா – அறிவியல் விளக்கம்

,

கற்பனைக்கே  எட்டாத  நிறங்களில் மலர்ந்து  சிரிக்கும் வண்ண வண்ண பூக்களின் அழகில் மயங்காதவர் யாரும் இல்லை ஆனால் பூக்களின் வண்ணங்களுக்கான அறிவியல் காரணம்  யாருக்கும் தெரிவது இல்லை வாருங்கள்  நண்பர்களே பூக்களின் நிறங்களுக்கான அறிவியலை அறிந்து கொள்வோம்.

பூக்களின் பல்வேறு நிறங்களுக்கு காரணம் ஆந்தோசயனின் எனும் நிறமி ஆகும் . ஆந்தோசயனின்( ஆந்தோபூ  சயனின்நீலம் )  என்பது  சர்க்கரைப்பகுதி இணைந்த ஒரு கரிமச்சேர்மம் இது .பூக்கள், கானிகள், இலை, வேர் என தாவரத்தின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது . 1920-களில் சர் ராபர்ட்  ராபின்சனும் அவரது குழுவும் ஆந்தோசயனின்  நிறமிகளை மூன்று வகைப்படுத்தினர் அவைகள் 
1.பெலார்கோனிடின் , 2.சயனிடின் ,3.டெல்பினிடின் ஆகும்  
ஆந்தோசயனில்  ஹைட்ராக்ஸில்  தொகுதிகள் எனப்படும் OH தொகுதிகளின் எண்ணிக்கை , பினைக்கப்பட்ட இடம் , வினையில்  ஈடுபடுவதற்ககான திறம் ஆகியவற்றைப்பொருத்து  நீலம், ஊதா, சிவப்பு , மஞ்சள் என பூக்களின் நிறங்கள் அமைகின்றன.

1943 –இல் கார்னெல் பல்கலைக்கழகத்தில் பூக்களின் நிறங்களுக்கும் உலோகங்களுக்குமான  தொடர்புகள் ஆராயப்பட்டது பூக்களின்  நீல நிறத்திற்க்கு காரணம்  அலுமினியச்சத்துகள், ஊதா நிறத்திற்க்கும் , சிவப்பு நிறத்திற்க்கும் காரணம் இரும்புடன்  சேர்ந்த பத்திற்கும் மேற்பட்ட உலோகங்கள் காரணம் என கூறப்பட்டது . மேலும்  தாவரங்களில் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை நிறங்கள் மூலம் அறிந்து அதற்கு தகுந்த  நடவடிக்கை  எடுத்தால்  தாவரங்கள் செழித்து வளரும் எனவும் கூறப்பட்டது.

ஒரு பூவில்  ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆந்தோசயனின்கள் இருக்கலாம் மேலும் குளோரோபில்கள்  போன்ற  அரோமேட்டிக் கரிமச்சேர்மங்கள் இருக்கலாம் . ஆந்தோசயனின்கள் அரோமேட்டிக் கரிமச்சேர்மங்களுடன் இணைந்து  பல்வேறு நிறங்களில் பூக்களை பூக்கச்செய்கின்றன மேலும் பருவகாலமாற்றங்கள் , மரபியல் மாற்றங்கள் போன்றவற்றால்  ஆந்தோசனிகள் மாற்றங்களுக்கு உட்படுகின்றன . ஆந்தோசயனின்களை குரோமோட்டோகிராபி  எனப்படும் வண்ணபகுப்பாய்வுக்கு உட்படுத்தி அவற்றின் வேதிக்கட்டமைப்பினை  அறியமுடியும்  இதனால் புதிய புதிய வண்ணங்களில் பூக்களினை பூக்கச்செய்ய முடியும். பூக்களின் அழகில் மனிதர்கள் மட்டுமல்ல பறவைகள், பூச்சிகள் , வண்டுகள்  போன்றவைகளும் கவரப்படுகின்றன இதனால் தாவரங்களில் அயல்மகரந்தச்சேர்க்கை  நடைப்பெற்று தாவரங்களின்  இனப்பெருக்கத்திற்கு  ஆந்தோசயனின்கள்  உதவுகின்றன

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates