Wednesday 29 June 2011

வலி

,

   


தினமும் வரும்
தேன் சிட்டுக்குஎப்படி சொல்லி
அனுப்புவது
வீடு மாற்றி செல்வதை.....?






http://www.box.net/shared/4b8b5zmces9dtmze62sf

Tuesday 28 June 2011

எளிதில் அழியும் பிளாஸ்டிக்

,
மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் காகிதம், துணி,போன்றவற்றை எளிதில் மக்கிபோக செய்கின்றன.ஆனால் பிளாஸ்டிக்கை பாக்டீரியாக்கள் சிதைக்காது எனவே சுற்றுபுற சீர்கேடு ஏற்படுகிறது . தற்போது பையோபால்(Biobol)என்ற மண்ணில் சிதையும் பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது .மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் பையோபால்(Biobol)என்ற பிளாஸ்டிக்கை சிதைத்துவிடுகிண்றன.இவைகள் சர்கரையை கொதிக்க வைபதின் மூலம் தாயாரிக்கப்படுகின்ரன.இப்புதிய பிளாஸ்டிக்கை தயாரிக்க இயற்கையாக கிடைக்கும் "அல்கேலிஜீன்ஸ் யூட்ரோபஸ்"எனும் பாக்டீரியம் உதவுகிறது.

Monday 27 June 2011

கணக்கதிகாரம் - விளாம்பழ கணக்கு

,
ஒரு பழக்கடைக்காரர் விளாம்பழங்களை விற்று வந்தார்.அவர் அசந்த நேரம் பார்த்து சில சிறுவர்கள் பழங்களை திருடி சென்றுவிட்டனர்.பழக்கடைகாரர் அரசனிடம் சென்று முறையிட்டார்.அரசன் உன்னிடம் எத்தனை பழங்கள் இருந்தன என்று கேட்டார்.அதற்க்கு பழக்கடைகாரர் அரசனிடம் எனக்கு கணக்கு தெரியது ஆனால் என்னிடம் பழங்களை இரண்டு இரண்டாக பிரித்தால் ஒரு பழம் மிஞ்சும் ,மூன்று மூன்றாக பிரித்தால் இரண்டு பழம் மிஞ்சும்,நான்கு நான்காக பிரித்தால் ஒரு பழம் மிஞ்சும் ஐந்து ஐந்தாக பிரித்தால் நான்கு பழம் மிஞ்சும், ஆறு ஆறாக பிரித்தால் ஐந்து பழம் மிஞ்சும் ஏழு ஏழாக பிரித்தால் ஒன்றும் மிஞ்சாது . அரசனுக்கோ ஒன்றும் விளங்கவில்லை பின் அமைச்சர் விளக்கினார். அமைச்சரின் விடை உங்களுக்கு தெரியுமா ?அமைசரின் விடை
7
:ன் மடங்குகள் 7 ,14,21,28,35,42,49,56,63,70,77,84,91,98,105,112,119,126..........................


2ஆல் வகுத்தால் 1 வருவது : 7,21,35,49,63,77,91,105,119.....
3ஆல் வகுத்தால் 2 வருவது : 35,77,119........
4ஆல் வகுத்தால் 3 வருவது : 35,119..
5ஆல் வகுத்தால் 4 வருவது :119...
6ஆல் வகுத்தால் 5 வருவது :119
7ஆல் வகுத்தால் மீதி வராது எனவே பழக்கடைக்காரரிடமிருந்த பழங்கள் 119 ஆகும்  

Sunday 26 June 2011

மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க

,
 முதலில் http://www.opera.com/mini/ எனும் முகவரிக்குச் சென்று ஒபெரா மினி டவுன்லோட் செய்யவும்.உங்களின் வை-ஃபை மொபைல் ஃபோன் மூலம் மேற்கண்ட முகவரிக்குச் சென்றிருந்தால் நேரடியாக மொபைலில் டவுன்லோடு செய்து இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அல்லது FireFox, IE போன்ற உங்கள் கம்ப்யூட்டரின் ப்ரவுஸர் மூலம் டவுன்லோடு செய்திருந்தால் அதை USB cable மூலமாகவோ அல்லது card reader மூலமாகவோ இன்ஸ்டால் செய்யவும்.இந்த
மென்பொருளை இன்ஸ்டால் செய்த பிறகு...செய்யவும் அட்ரஸ் பாரில் opera:config என்பதை டைப் செய்து ஒகே கொடுக்கவும். (www என்று டிஃபால்ட்டாகத் தெரியும் எழுத்துக்களை நீக்கிவிட வேண்டும்)வரும் "பவர் யூஸர் செட்டிங்ஸ்" பக்கத்தில் use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் எழுத்துருக்கள் தெளிவாக தெரிய ஆரம்பிக்கும்.பின்குறிப்பு:நாம்
Opera
கூறிய Use bitmap fonts என்ற ஆப்ஷனை எனேபிள் செய்யும் வரை யுனிகோடு தமிழ் தள எழுத்துருக்கள் கட்டம் கட்டமாகத் தான் தெரியும். ஒரு முறை எனேபிள் செய்துவிட்டால் யுனிகோடு தளங்களோடு ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் போன்ற எந்த ஒரு மின் அஞ்சல் சேவையையும் தமிழில் தங்கு தடையின்றி வாசிக்க இயலும்.ஸெட்டிங் இல் மொபைல் வியூ என்ற ஆப்ஷன் உள்ளது. இதனை டிக் அடித்து சேமித்தால் டெக்ஸ்ட் ஆனது வாசிக்க மிக எளிதாக (printer friendly) மொபைலின் நீள அகலத்திற்கு ஏற்றார் போல் மாறிக் கொள்ளும்


சுஜாதா

,
சுஜாதா தமிழ் இலக்கிய உலகில் விட்டு சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.அவர் தொடாத துறைகளே இல்லை அறிவியலை பாமரனுக்கு கொண்டு சென்றதில் சுஜாதாவிற்கு மிக முக்கிய பங்கு உண்டு அவரின் நுல்களை எப்போது படித்தாலும் அக்காலத்திற்கு ஏற்ற மாதிரிதான் இருக்கும். அவரின் நுல்களை மின் புத்தகமாக கீழ் காணும் வலைதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து இன்புறுங்கள் http://www.tamilcube.com/

Saturday 25 June 2011

முதன் முதலாய்........

,
                                                               

நெஞ்சம் நிறைந்த நேசங்களுடன்
என்னை பாதித்த ......
என்னை செதுக்கிய ....
என்னை செலுத்தும் நினைவுகளை
 உங்கள் இதயத்திற்கு இடம் மாற்றும் விருப்பங்களுடன்
என் வலைப்பதிவை தொடங்குகிறேன் .......
  
 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates