Tuesday 25 September 2012

ஆல்பிரட் நோபல் மரணத்தின் வியாபாரியா சமாதானத்தின் தூதுவரா ?

,


நோபல் பரிசு இந்த ஒரு அங்கீகாரத்திற்காக உலகின்  அனைத்து விஞ்ஞானிகள் மட்டுமல்ல இலக்கியவாதிகளும்,
 சமூகவியல் அறிஞர்களும்
அயரது பாடுபட்டு வருகின்றனர் . ஒவ்வொரு நாட்டின் குடிமகனும் தனது
நாடு நோபல் பரிசு வாங்கி விட்டால் பெருமிதம் கொள்கிறான் .
ஆனால் இந்த நோபல் பரிசை நிறுவிய ஆல்பிரட் நோபல் மரணத்தின் வியாபாரி
என உலகமே அவரை  திட்டித்தீர்த்தது  என உங்களுக்கு தெரியுமா ?
வாருங்கள் நண்பர்களே வரலாற்றை புரட்டிப்பார்ப்போம்

ஆயுதவியாபாரியின் மகன்
கிபி 1833 அக்டோபர் மாதம் 21 தேதி ஸ்வீடனின் ஸ்டாக்கோம் நகரில் பிறந்தார்
தந்தை இம்மானுவேல் துப்பாக்கி, பீரங்கி போன்ற ஆயுதங்களைச்செய்யும்
ஒரு புகழ்பெற்ற ஆயுதவியாபாரி தந்தையுடன் சேர்ந்து போர்
ஆயுதங்கள் செய்யும் தொழிலில் ஆல்பிரட்  ஈடுபட்டார்
ஆயுத தயாரிப்பு தந்தைக்கும் மகனுக்கும் பெரும் பொருள் ஈட்டித்தந்தது


நீரில் மிதக்கும் கன்னி வெடிகள்
கிபி 1853 முதல் 1856 வரை நடை பெற்ற கிரீமிய போரில்  கப்பல்களை
வெடித்து சிதறவைக்க நீரில் மிதக்கும் கன்னி வெடிகளை தந்தையும் மகனும் சேர்ந்து தயாரித்தனர் .
மிதக்கும் கன்னி வெடியில் ஒரு கண்ணாடி குழாயில் கந்தக அமிலம் இருக்கும்
கண்ணாடிகுழாய் கப்பலில்  மோதி  உடையும் போது கந்தக அமிலமானது
பொட்டாசியம் குளோரேட் மற்றும் கந்தகம் கலந்த கலவையின் மீது கொட்டும்
இதனால் வெடி விபத்து  ஏற்படும் ஆனால் இந்தகைய வெடிகளினால்
பெரிய போர்கப்பல்களுக்கு சேதத்தினை  ஏற்ப்படுத்த முடியவில்லை
எனவே புதிய திறன் மிக்க வெடிபொருள் கண்டுபிடிக்க வேண்டும்
என ஆல்பிரட் ஆராய்ச்சியில் இறங்கினார்.

புதிய  எமன்

1847 இல்  நைட்ரோகிளிசரின்  என்ற வெடிக்கும் தன்மையுடைய திரவம் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது .
சாதாரன வெப்பநிலையில் கூட நைட்ரோகிளிசரின் திரவத்தை கையாளுவது
மிகா ஆபத்தாக இருந்தது ஆனால் ஆல்பிரட்டோ நோபல்  நைட்ரோ கிளிசரின்
மூலம் திறன் மிக்க வெடிபொருளை உருவாக்க முடியுமென தீர்க்கமாக
நம்பியதல் தன்னுடைய ஆயுத தொழிற்சாலையில் அதன் மீது பல
ஆய்வுகளை நடத்தி நைட்ரோ கிளிசரினை வெடிக்க வைக்க ஒரு
கருவியை கண்டுபிடித்து 1863 இல் பேடன்ட் உரிமையையும் வாங்கி
விட்டார். ஆனல் 1864 இல் நோபலின் தொழிற்சாலையில்  நைட்ரோகிளிசரினால்
பெரிய வெடி விபத்து  ஏற்பட்டது இந்த விபத்தில் ஆல்பிரட் தன்னுடைய தம்பி
எமில் மற்றும் நான்கு தொழிலாளர்களும் இறந்து போயினர் இதன் காரணமாக
அரசு ஆல்பிரட்டின் நைட்ரோகிளிசரின் வெடி தயாரிப்புக்கான உரிமத்தை
இரத்து செய்து விட்டது  எனவே தம் தொழிற்சாலையை ஜெர்மனியில்
உள்ள ஹாம்பர்க் நகருக்கு மாற்றினார் நைட்ரோகிளிசரினை விற்று பெரும்
பொருள் சம்பாதித்தார் ஆனால்  நைட்ரோகிளிசரினில் இருந்த  அபாயத்தை
குறைக்க முடியவில்லை ஆல்பிரட் நோபல் கப்பல்களில்  நைட்ரோகிளிசரினை
அனுப்பும்போது துத்தநாகபீப்பாய்களில் அடைத்து அதை மரப்பெட்டிகளில்
வைத்து
அதை சுற்றிலும் மரத்தூளை நிரப்பி அனுப்புவார் ஆனால் இந்த பம்மாத்து
வேலைக்கெல்லாம்  அடங்கவில்லை நைட்ரோகிளிசரின்  எமன் இதனால்
விபத்துக்கு மேல் விபத்து ஏற்ப்பட்டது .உலகெங்கும்  நைட்ரோகிளிசரினை
எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றது இதனால் பல நாடுகள்
நைட்ரோகிளிசரினுக்கு தடை போட ஆரம்பித்து விட்டனர்
எங்கே தனது ஆயுததயாரிப்பிற்கு மிகப்பெரிய பொருளாதார பேரழிவு
ஏற்பட்டுவிடுமோ  என அஞ்சினார்  ஆல்பிரட் நோபல்  எனவே
நைட்ரோகிளிசரினை ஆபத்தில்லாமல் கையாள ஒரு வழியை கண்டுபிடிக்க
அயராது பாடுபட்டார் ஆல்பிரட்நோபல் .

டைனமைட் தாண்டவம்

தனது தொழிற்சாலை அமைந்துள்ள ஹம்பர்க் நகரின் அருகே உள்ள
மலைக்குன்றுகளில் கிடைக்கும் ஒரு வகை ஒரு வகை
களிமண் நைட்ரோகிளிசரினின் வீரியத்தை அடக்கும்  என தற்செயலாக
கண்டுபிடித்தார் . அந்த களிமண் நைட்ரோகிளிசரினை  எளிதாக
ஈர்த்துக்கொண்டது அந்தக்களிமண்ணினை தேவையான வடிவத்தில்
அச்சுக்களாக செய்து ஆபத்து இல்லாமல் அனுப்ப முடிந்தது அந்த
களிமண்ணில் மேலும் மேலும் ஆராய்ச்சி செய்து அதை வெடிக்க வைத்து
வெற்றி கண்டார் 1867 இல் டைனமைட்  என பெயரிட்டு விற்பனைக்கு கொண்டு
வந்தார் .டைனமைட் வியாபாரம் சக்கைபோடு போட்டதால் உலகின்
மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர் ஆனார் ஆல்பிரட் நோபல் . ஆனாலும்
திருப்தி அடையாத ஆல்பிரட்நோபல்1875 இல் நைட்ரோ செல்லுலோஸ் மற்றும்
நைட்ரோகிளிசரின் ஆகியவற்றை சேர்த்து வெடிக்கும் தன்மையுடைய ஜெலட்டின்
என்ற பொருளை உருவாக்கினார்.1887 இல் நைட்ரோ செல்லுலோஸ்,
நைட்ரோகிளிசரின் மற்றும் கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து பாலிசைட்
என்ற வெடிபொருளை உருவாக்கினார்

விஞ்ஞான வித்தகர்
ஆல்பிரட்நோபல் டைனமைட்க்காக உலகம் முழுவதும் அறியப்பட்டாலும்
,இயற்பியல் , மின்வேதியல்,உயிரியல்,மனிதஉடலியல்,கண்பார்வையியல்
போன்றபல துறைகளில் கண்டுபிடிப்புகள் செய்து 350 க்கும் மேற்ப்பட்ட
பொருள்களுக்கு பேடன்ட் வாங்கி இருந்தார் டைனமைட் பல ஆயிரம்
பேரை கொன்று குவித்ததால் அவர் வாழ்ந்த காலத்தில் உலகம் அவரை தூற்றியது

சமாதான தூதுவராக்கிய சம்பவங்கள்

அழிவு ஆயுதங்களின் தந்தை ஆல்பிரட்நோபல்  என உலகம் தூற்றினாலும்
ஆல்பிரட்டின் அடிமனதில் அவருக்கே தெரியாமல் அன்பும் கருணையும்
துடித்துக்கொண்டு இருந்தது .ஒரு நாளிதழுக்கு கிடைத்த தவறான தகவலால்
ஆல்பிரட்நோபல் இறந்துவிட்டதாக கருதி " மரணத்தின் மொத்த வியாபாரி
இறந்துவிட்டார் "  என செய்தி வெளிட்டது அந்த நாளிதழை பார்த்த
ஆல்பிரட்நோபலுக்கு வருங்காலம்  தன்னை எவ்வாறு சொல்லப்போகிறது
என சிந்திக்க தொடங்கினார் மேலும் ஆல்பிரட் நோபலிடம் ஒரு காலத்தில்
பணியாற்றிய பார்த்தா எனும் பெண்மனி மனிதாபிமானமும் உலக சமாதானத்தில்
ஆர்வமும் கொண்டவர் அவர் எழுதிய "ஆயுதங்களை கீழே போடுங்கள்"
எனும் புத்தகம் உலகம் முழுவதும் புயலை கிளப்பியது அதனால் பலர் சமாதான
வழிக்கு திரும்பினர் ஒருமுறை பார்த்தா தன்னுடைய முன்னாள் முதலாளியுடன்
உரையாடும் போது அவரால் உலகில்  ஏற்ப்பட்ட ஆயுத பெருக்கத்தினையும் அதனால்
ஏற்ப்பட்ட உயிர் இழப்புகளையும் கண்ணீருடன் குறிப்பிட்டார் ஆனால் அதை
ஏற்றுக்கொள்ள ஆல்பிரட்டின் கௌரவம் இடம் தரவில்லை பேரழிவு ஆயுதங்கள்
இருந்தால் மற்ற நாடுகள் போர் செய்ய தயங்கும் அதனால் உலகில் சமாதானம்தான்
பெருகும்  என்று கூறி சமாளிக்கப்பார்தார் ஆனால் பார்தாவின் வாதங்களுக்கு அவரால்
பதில் கூற முடியவில்லையானலும் அவற்றை  ஏற்றுக்கொள்ள ஆல்பிரட் தயாராக
இல்லை  எனவே இனி உங்களை நான் சாகும் வரை சந்திக்கவே மாட்டேன் என
கூறிவிட்டு பார்த்தா சென்றுவிட்டார்

நோபல் பரிசு உதயம்

திருமணம் செய்து கொள்ளாமலே வெடிபொருள் ஆராய்ச்சி ,
பணத்தை தேடல்  என்று வாழ்க்கையை கழித்த ஆல்பிரட்டின் கடைசிகாலத்தில்
தனிமை அவரை வாட்டியது வாழ்வின் மீதான புரிதல்கள் அவருக்கு பிடிபட
தொடங்கியது தன்னுடைய கண்டுபிடிப்புகள் எத்தனை ஆயிரம் உயிர்களை
கொன்றுள்ளது இன்னும்  எத்தனை கோடி உயிர்களை கொல்லும்  என்ற
எண்ணம் அவர் நெஞ்சை பதற வைத்தது  எனவே 1985 நவம்பர் மாதம்
தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் ஒரு அறக்கட்டளையாக்கினார் அதிலிருந்து கிடைக்கும் வட்டியை கொண்டு இயற்பியல்,வேதியியல்,மருத்துவம்,இலக்கியம்,
உலகசமாதானம்  ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு பரிசுகள்
கொடுக்கச்செய்தார் .முதல் நோபல் பரிசுகள் 1901 ஆம் ஆண்டு முதல்
வழங்கப்படுகிறது உலக மக்களுக்கு பயன்படும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு
அங்கீகாரமு, உலக சமாதானத்திற்கு ஊக்கமும் கொடுத்தால் உலகில் அமைதி
ஏற்படும்  என நம்பினார் 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் இறந்தார்

டிஸ்கி

1905 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு பார்த்தாவிற்கு கிடைத்தது







Monday 17 September 2012

TNPSC போட்டித்தேர்விற்கான தமிழ் இலக்கண ஒலி நூல்கள் TNPSC Tamil Ilakkanam Audio Book

,


நண்பர்களே TNPSC போட்டித்தேர்விற்காக தமிழ் இலக்கன மென்நூல்களை ஒலி வடிவில் பதிவிட்டு 
உள்ளேன் . இதில் தமிழ் இலக்கணம்  ஒலி  வடிவில் தெளிவாக விளக்கப்பட்டு உள்ளது  இணைய தேடலில் எனக்கு 
கிடைத்த ஒலி  நூல்களை  உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்   கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம் பதிவிறக்கி 
பயன் பெறுங்கள்

Wednesday 12 September 2012

TNPSC தேர்விற்கான தமிழ் இலக்கண மென்நூல்கள் – Tamil Elakkanam PDF

,

நண்பர்களே TNPSC போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவரா நீங்கள் உங்களுக்கு அவசியம் தேவைப்படும் தமிழ் இலக்கண மென்நூல்களை பதிவிட்டுள்ளேன் இவற்றில் தமிழ் இலக்கணப்பகுதிகள் முழுமையாக விளக்கப்பட்டு உள்ளது இணைய தேடலில் எனக்கு கிடைத்த நூல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி எனக்கு கீழே உள்ள  பதிவிறக்கச்சுட்டி மூலம் பதிவிறக்கி பயன்பெறுங்கள்



Saturday 8 September 2012

ஏழ்மையினால் படிப்பை கைவிட்டாலும் உலகை திகைக்க செய்த விஞ்ஞானி

,

அமெரிக்காவின் தலைசிறந்த அரசியல் அறிஞரும் உலகம் போற்றும் விஞ்ஞானியுமான பெஞ்சமின் பிராங்கலின் குடும்ப வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை கைவிட்டு பத்து வயதிலே வேலைக்கு பேனவர் என்று உங்களுக்கு தெரியுமா ? வாருங்கள் நண்பர்களே அந்த வியத்தகு விஞ்ஞானியின் வரலாற்றை புரட்டிப்பார்ப்போம் .

அமெர்க்காவின் பாஸ்டன் நகரில் எளியகுடும்பம் ஒன்றில் பிறந்த பிராங்கலின் குடும்ப வறுமையின் காரணமாக பள்ளி படிப்பை கைவிட்டு விட்டு 10 வயதிலே தனது தந்தையுடன் மெழுகுவர்த்தி தொழிலை மேற்கொண்டார் . ஆனால் அவருக்கு அந்த தொழில் பிடிக்கவில்லை ஆதலால் அச்சுக்கூடத்தில் வேலைக்கு சேர்ந்தார் . சிறு வயதிலே அச்சுக்கூடத்தை தனியாக நிர்வாகாம் செய்யும் அளவிற்க்கு திறமையை வளர்த்துக்கொண்டார் .

பட்டினி இருந்தும் அறிவை வளர்தவர்

அச்சுத்துறையில் பணியாற்றியதால் பலவகையான் நூலக்ளை வாசிக்கும் பழக்கம் ஏற்ப்பட்டது . பள்ளிப்படிப்பை கைவிட்டாலும் தன்னுடைய உணவுச்செலவை குறைத்துக்கொண்டும் சில நேரங்களில் பட்டினி இருந்தும் பணத்தை மிச்சப்படுத்தி பல வகையான நூல்கள் வாங்கி படித்தார் தனது இருபது வயதில் தனியாக அச்சுக்கூடத்தை நிறுவி நூல்களை வெளியிட்டார் .அறிவை வளர்க்கும் தரமான நூல்கள் கிடைக்காமல் தான் பட்ட கஷ்டங்களை மக்கள் படக்கூடாது என்பதற்காக  முதன் முறையாக நடமாடும் நூல் நிலையம் ஒன்றினை அமைத்தார்

அறிவியல் சாதனைகள்

பிராங்லின் தனது 38 ஆம் வயதில் அறிவியல் துறையில் நிலைமின்சாரம் ஆராய்ச்சியில் இறங்கினார் லண்டன் நகரில் மின்புயலின்(Electric storm) போது பட்டம் ஒன்றை பறக்கவிட்டு மின்னல் மின்னாற்றலால் ஏற்படுகிறது என்று உலகிற்கு அறிவித்தார் மேலும் இடி இடிக்கும்போது கூர்மையான இரும்பு கம்பியை உயரமான கட்டிடத்தில் வைத்து அதை ஒரு கம்பி வழியாக பூமியில் செலுத்தும் இடிதாங்கி தத்துவத்தையும் கூறினார். ஜரோப்பா முழுவதும் இவரது ஆய்வினை அறிந்ததோடு மட்டுமில்லாமல் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்த்தும்  வெளிட்டனர்.

உலகை திகைக்க செய்த சோதனை

மின்னேற்றத்தை சேமிக்கும் லெய்டன் ஜார் (leyden jar) எனப்படும் குடுவை உட்புறம் நீரினை நிரப்பிக்கொண்டார் அதன் வெளிப்புறம் உலோகமுலாம் பூசப்பட்டது. இந்த ஜாடியினை மின்னேற்றம் செய்தார் பின் ஜாடியில் இருந்து நீரினை கொட்டி விட்டு புதிதாக நீரினை நிரப்பினார் அப்போதும் ஜாடி மின்னேற்றம் கொண்டு இருந்தது அதுவரை அறிவியல் உலகம் நீரில் தான் மின்னேற்றம் இருக்கும் என நம்பி வந்தது ஆனால் தனது லெய்டென் ஜார் சோதனை மூலம் மின்னேற்றம் ஜாடியின் நீரில் இல்லை கண்ணாடியில் இருந்தது என நிறுவிக்காட்டினார் இந்த தத்துவம்மூலம் தொலைக்காட்சி , வானொலிகளில் பயன்படும் parallel plate capacitor ஐ கண்டுபிடித்தார் .
நவீன மின் இயற்பியலுக்கு அடிப்படை
இன்றை அறிவியல் எலக்ட்ரான்களின் ஓட்டமே மின்சாரம் என்று கூறுகிறது இதை பதினேழாம் நூற்றான்டிலே தனது மின்சாரம் பற்றிய பாய்மக்கொள்கை(Fluid Theory of Electricity ) யில் பிராங்கலின் கூறியுள்ளார் அதன் சாரம்சம் இதுதான் “ அனைத்து பொருள்களும் ஓரளவு மின் பாய்மத்தை தன்னுள்ளே கொண்டு உள்ளது ஒரு பொருள் மின் பாய்மத்தை ஏற்க்கவோ அல்லது இழக்கவோ செய்யும் அது பாய்மத்தை ஏற்றாலும் இழந்தாலும் மின்னேற்றம் கொண்டதாக மாறிவிடுகிறது மின் பாய்மத்தை ஏற்றால் நேர்மின்னோட்டம், மின்பாய்மத்தை இழந்தால் அது எதிர் மின்னோட்டம் “
பிராங்லின் இந்த தத்துவம் தான் இன்றைய நவீன மின் இயற்பியலுக்கு அடிப்படை
ஏழ்மையால் பள்ளிப்படிப்பை பத்து வயதிலே நிறுத்திய பெஞ்சமின் பிராங்கலின் அரசியலில் பல பதவிகளை பெற்று உயர் நிலையை அடைந்ததோடு மட்டுமல்ல அறிவியல் துறையிலும் பல சாதனைப்படைத்தார் . தனது 85 ஆம் வயதில் இறந்தார்

Friday 7 September 2012

தொலைந்து போன நாட்குறிப்பின் கடைசி பக்க காதல்

,
தொலைந்து போன
நாட்குறிப்பின்
கடைசி பக்கத்திலிருக்கும்
உன் புகைப்படத்திற்கு
தெரியுமா ?
தொலைந்து போனது
நீயும் தானென்று ?

Wednesday 5 September 2012

ஐன்ஸ்டீன் ஒளியை வளைத்தாரா ?

,
ஒளி நேர்க்கோட்டில்தான் செல்லும் மின்விசையோ, காந்த விசையோ ஒளியை வளைக்க முடியாது என்பது பள்ளில் நாம் படித்தது ஆனால் ஐன்ஸ்டீனோ ஒளியை வளைக்க முடியும் என்று கூறினார் அக்கூற்று மெய் எனவும் நிறுபிக்கப்பட்ட  நிகழ்வு உங்களுக்கு  தெரியுமா ?
முதலில்  ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் பற்றி தெரிந்து கொள்வோம்
ஒரு இரப்பர் விரிப்பின் நடுவே இரும்பு குண்டை வைத்தால் அதன் விளைவாக ஒரு பள்ளம் ஏற்படும் . அதன் அருகே வேறு ஒரு குண்டை வைத்தால் வளைவில் வளைந்தோடும் அல்லவா அது போல வின்வெளியில் உள்ள நிறை மிகுந்த கோள்கள், வின்மீன்தொகுதிகள் போன்றவற்றால் நமது வின்வெளியே ஆங்காங்கே குழி போல குழிந்து காணப்படும் அதன் அருகே வேறு எந்த பொருள் வந்தாலும் மிகுந்த நிறை காரணமாக அந்த பொருள்  ஈர்க்கப்படும்   ஆக மொத்ததில் வெளியின் வடிவம்எப்படி இருக்க வேண்டும் என பருப்பொருள்(Matter)   கூறுகிறது  அதே சமயம் மறுபுறத்தில் பருப்பொருள் எவ்வாறு  இயங்க வேண்டுமென வெளி கூறுகிறது .
ஒளியை வளைத்த நிகழ்வு
சூரியன் போன்ற  நிறை மிகுந்த பொருட்களின்  அருகில் ஒளி பாயும் போது ஒளி வளையும் என்று தனது புரட்சிகர கருத்தை 1915 இல் ஐன்ஸ்டீன் கூறினார்  அவ்வளவுதான்  அறிவியல் யுகம்  பொங்கி எழுந்தது  ஐன்ஸ்டீன் முட்டாள்தனமாக கூறுகிறார் . ஒளியாவது  வளைவதாவது  இதெல்லாம்  சாத்தியமே இல்லை என கூக்குரல் இட்டது ஆனால்  ஐன்ஸ்டீனோ தன் வாழ்வில் மிகப்பெரிய சாதனையை செய்து முடித்ததாக தன் மகனுக்கு கடிதம் எழுதினார்  . அவரின் ஆய்வினை ஏன் அறிவியல் உலகம் உடனடியாக ஏற்கவில்லை எனில் ஒளியானது சில சமயம்  அலை போலவும் சில சமயம் துகள் போலவு செயல்படுகிறது . ஒளியின் துகளை போட்டான் என அழைக்கின்றனர் இது வினாடிக்கு சுமார் 3 இலட்சம் கிலோமீட்டர் வேகத்தில்  நேர்க்கோட்டில் செல்லும் இதன் ஆற்றல் ஒளியின் நிறத்தை பொறுத்து 1.5எலெக்ட்ரான் வோல்ட் முதல் 3.5 எலெக்ட்ரான் வோல்ட் வரை  மாறுபடுகிறது . இவ்வளவு  வேகத்தில் செல்லும் ஒளியை வளைக்க வேண்டும் எனில் எதன் மூலம் வளைப்பது , யார் வளைப்பது என பல்வேறு கேள்விகளை கேட்டனர்  ஆனால் 1919 இல் ஐன்ஸ்டீனின் கூற்றை மெய் என நிறுபனம்  செய்ய  ஐன்ஸ்டீனின் தீவிர ஆதரவாளர் ஆர்தர் எடிங்டன் எனும் விஞ்ஞானிக்கு ஒரு வாய்ப்பு கிட்டியது 1919 மே 29 ஆம் தேதி  நடைபெற்ற  முழு சூரிய கிரகணத்தை ஆராய  உலகின் இரண்டு மூலைகளுக்கு  இரண்டு குழுக்களை அனுப்பினார் . ஆப்பிர்க்காவில் ஒரு குழு பிரேசிலில் ஒரு குழு என இரண்டுகுழுக்களும்  சூரிய கிரகணத்தை ஆராய்ந்தது
நடந்தது என்ன ?
முழுச்சூரிய கிரகணத்தின் போது சூரியன்  நிலாவினால் சில நிமிடங்களுக்கு  முழுமையாக மறைக்கப்பட்டது அப்போது சூரியனுக்கு பின் புறம் உள்ள வின்மீன்கள் தெரிந்தன  அதாவது ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் தத்துவப்படி  விண்மீன்களின்  ஒளி சூரியனது நிறையினால் ஈர்க்கப்பட்டதால்   ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் தத்துவப்படி குழிந்த வெளியின் மீது வரும் போது  ஒளி தனது நோர்க்கோட்டு பதையில் இருந்து விலகியது  ஆகையால் சில விண்மீன்கள் இருக்க வேண்டிய இடத்திலிருந்து  இடம் மாறி உள்ளதாக புலப்பட்டது  ஆகையால்  ஐன்ஸ்டீன் கூறியது உண்மை என நிறுபிக்கப்பட்டது .

Sunday 2 September 2012

அரசனின் ஏழு மகள்களும் முத்துக்களும் – கணிதப்புதிர்

,
ஒரு அரசனுக்கு ஏழு மகள்கள் இருந்தனர் அவனிடம் 49 முத்துக்கள் இருந்தன அதில் முதல் முத்தின் மதிப்பு ஒரு பொற்காசுகள் , இரண்டாவது முத்தின் விலை இரண்டு பொற்காசுகள் , மூன்றாவது முத்தின் மதிப்பு மூன்று பொற்காசுகள் நான்காவது முத்தின் மதிப்பு நான்கு பொற்காசுகள் இப்படியாக 49 வது முத்தின் மதிப்பு 49 பொற்காசுகள் . அரசன் தனது 49 முத்துக்களையும் தனது ஏழு மகள்களுக்கும் ஏழு  ஏழு முத்துக்களாக
பிரித்து தர வேண்டும்  ஆனால் முத்துக்களின் மதிப்பு சமமாக இருக்க வேண்டும் . நண்பர்களே உங்களால் 49 பொற்காசுகளின் மதிப்பு சமமாக பிரிக்க முடியுமா ?
முயற்சித்து பாருங்கள் இல்லை எனில் விடையை கீழே பாருங்கள்

கணிதப்புதிரின் விடை

நண்பர்களே  இந்த கணக்கு இயல்எண்களின் கூடுதலில்  அமைந்துள்ளது
1+2+3+4+................49
எனவே இயல்எண்களின் கூடுதல் காண சூத்திரம் = n(n+1)/2
                                             = 49(49+1)/2
                                             = 49(50)/2
                                             = 49(25)
                                             = 1225
அரசனுக்கு ஏழுமகள் எனவே 1225 ஐ  7 ஆல் வகுக்க
                                             = 1225/7
                                             = 175
எனவே 49 முத்துக்களின் மொத்த மதிப்பு 1225 இதை ஏழால் வகுத்தால் கிடைப்பது  175  . அரசன் தனது 49 முத்துக்களையும் தனது ஒவ்வொரு  மகள்களுக்கும் ஏழு முத்துக்களை கொடுத்தார் ஏழு முத்துக்களின் மதிப்பு 175  ஆக இருக்குமாறு பிரித்துக்கொடுத்தார்

வேர்டு பார்மெட்டில் 60 ரெஸ்யூம்கள் MS Word Format 60 Resume’s

,
Resume என்பது வேலை தேடுபவர்களின் மந்திர சொல் . திறமையிருந்தும் Resume ஐ சரிவர தயாரிக்காத்தால் வேலை இழந்தவர்கள் பலர். Resume என்பது உங்களைப்பற்றிய தெளிவான அறிமுகத்தை கொடுத்து உங்களுக்கு வேலை பெற்றுத்தருவதாகும்  . எனவே Resume தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் . Resume தயாரிப்பு என்பது இன்றை இளைஞர்களுக்கு  சரிவர தெரிவது இல்லை  Resume தயாரிக்க உதவ பல இணைய தளங்கள் இருப்பினும் அதன் மூலம் சரியாக தயாரிக்க முடிவது இல்லை எனவே வேர்டு பார்மெட்டில் 60 மாடல் ரெஸ்யூம்களை தயாரித்து உள்ளேன்  இதை இலவசமாக பதிவிறக்கி  உங்கள் பெயர் முகவரி, திறமைகள் போன்றவற்றை எடிட் செய்து கொள்ளுங்கள் அவ்வாறு செய்யும் போது கீழ் கண்ட உதவிக்குறிப்புகளையும் கவனத்தில் கொள்ளுங்கள் . 60 மாடல் ரெஸ்யூம்களை வின் ஸிப் செய்து உள்ளேன் அதை நீங்கள் Extract செய்து கொள்ளுங்கள்



*  நீங்கள் எந்த நிறுவனத்திற்கு Resume அனுப்பும் போதும் ,எந்த வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை ஒரு விண்ணப்பமாக எழுதி அதனுடன் Resumeஐ இணைத்து அனுப்புங்கள் .
* Resume எழுதும் போது தாளின் இடது ஓரத்தில் முதலில் உங்கள் பெயரினை தெளிவாக எழுதுங்கள், வலது ஓரத்தில் உங்களின் சமீபத்திய தெளிவான புகைப்படத்தை இணையுங்கள்.

*  அதிகப்படியான கட்டங்கள், கலர்ஷேடுகள், தெளிவற்ற ஃபான்ட் , அதிகமான அடிக்கோடு இடுதல் போன்றவைகளை தவிர்க்க வேண்டும்
*  இமெயில் முகவரியை குறிப்பிடும் போது உங்களின் பெயரோடு தொடர்புடைய இமெயில் முகவரியை கொடுங்கள் அதை விட்டு Jollyboy_Rsp@gmail.com போன்ற பெயர்கள் உடைய  இமெயில் முகவரியை கொடுக்காதீர்கள் அது எதிர்மறை விளைவுகளை ஏற்ப்படுத்தும்

*  நோக்கங்களை(Objective) தெளிவாக குறிப்பிடுங்கள்
*  கல்வித்துறை குறித்த தகவல்களை எளிமையாக கொடுங்கள்
*  உங்களின் தனித்துவமான திறனை குறிப்பிடுங்கள் அதை  தவிர்த்து கல்லூரியில் படித்த பாடங்களையெல்லாம் கொடுக்காதீர்கள்  உதாரணமாக
கல்லூரியில் படித்த J2EE,Visual Basic, Oracle, C++, HTML, Data Management போன்றவைகளை Resume இல் கொடுத்து இருந்தீர்களானால் அதை பற்றி உங்களை 10 நிமிடம் பேச சொன்னால் உங்களால் தொடர்ச்சியாக பேச முடியுமா  என யோசியுங்கள்.

* பிறந்த தேதி,திருமணநிலை, பாலினம், மதம் , தெரிந்த மொழிகள் போன்ற தனிப்பட்ட விவரங்களை சரியாக கொடுங்கள்.
*  Hw r u , Looking 4 ur reply , போன்ற SMS பாணியில் விவரங்களை கொடுக்காதீர்கள்
* நீங்கள் தயாரித்த Resumeஐ உங்களின் இரண்டு அல்லது மூன்று நண்பர்களிடம் கொடுத்து சரிபார்த்த பின்பே நிறுவனங்களுக்கு  அனுப்புங்கள்

*  இமெயிலில் அனுப்பும் போது PDF வடிவில் அனுப்புங்கள் இதனால்  ஃபான்ட் பிரச்சனைகள் தவிர்க்கப்படும்  
*  இமெயிலில் அனுப்பும் போது அட்டாச்மென்ட்களில் உங்களது Resumeக்கு உங்களின் பெயரில் பெயரிடுங்கள் உதாரணமாக   Guru resume போன்று கொடுங்கள் வெறுமனே Resume என  கொடுக்காதீர்கள்
*  இமெயிலில் அனுப்பும் போது சப்ஜெக்ட் லைனிலேயே முக்கியமான வார்த்தைகளை குறிப்பிடுங்கள் எக்காரணம் கொண்டும் சப்ஜெக்ட் இல்லாமல் இமெயில் அனுப்பாதீர்கள்
* உங்களது Resumeஐ அடிக்கடி புதிப்பியுங்கள் ஒரு முறை பிரின்ட் எடுத்துவிட்டு அதையே எல்லா நிறுவனங்களுக்கும் அனுப்புவதை தவிர்த்துவிடுங்கள் .
Dear friends here I am attached 60 model Resume in Ms word format if you want model Resume please click here
 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates