Wednesday 26 December 2012

ஆன்ட்ராய்ட் OS இலவச பதிவிறக்கம் - ANDROID OS Free Download

,

    நண்பர்களே BSNL விலை குறைந்த டேபிளட்களை வெளியிட்டாலும் அவற்றில் சில டேபிளட்களில் ஆன்ட்ராய்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் தீடீரென்று ஹேங் ஆகிவிடுகிறது . ஆர்வக்கோளாறு காராணமாக நான் வாங்கிய டேபிளட்டும் ஒரே வாரத்தில் ஹேங் ஆகிவிட்டது . இதற்கிடையில் பிரபல பதிவர் ரகிம்கஸாலி இணையம் மூலம் புக் செய்து வாங்கிய டேபிளட்டும் இது போல மக்கர் செய்ததை பற்றி வருத்தத்துடன் வெளியிட்ட பதிவு வேறு நினைவுக்கு வந்தது  நல்லவேளை  இணையம் மூலமாக நான் புக்கிங் செய்திருந்தாலும் அதன் மூலம் வாங்காமல்  டீலரிடம் வாங்கியிருந்தேன் அதனால் அவரிடம் சென்றேன் . நான் டேபிளட் வாங்கியதற்கான சான்றுகளின் நகலை பெற்று கொண்டு அவர் வைத்திருந்த ஆண்டிராய்ட் OS ஃபேக்கப் மெமரி கார்டு மூலம் டேபிளட்டில் OS சரி செய்து தந்தார் அவரிடம்  அந்த OS யை பென்டிரைவில் காப்பி செய்து தருமாறு கேட்டேன் அவரோ நீங்கள் எவ்வளவு பணம் தந்தாலும்  தரமுடியாது இது பென்டா டேபிளட் நிறுவனம் தந்தது எனக்கூறிவிட்டார் நானும் டேபிளட்டை  சரி செய்து தந்ததே  போதுமென்று மகிழ்ச்சியுடன் வந்துவிட்டேன் ஆனால் எனது மகிழ்ச்சி சில மாதம் கூட நீடிக்க வில்லை  . டேபிளட்டில் Game விளையாடிய நண்பரின் மகன் தெரியாமல்  OS  ஐ பார்மெட் செய்துவிட்டான் .எனவே இந்த முறை டீலரிடம் செல்லாமல் இதற்கான தீர்வை இணையத்தில் தேடினேன் நான் கண்ட தீர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நண்பர்களே ஒரு சிறு குறிப்பு .
 ஒரு நல்ல Card Reader இல் 2GB Micro SD மெமரி கார்டினை பொருத்தி USP போர்டினுள் சொருகி விடுங்கள் உங்களது கணினியில் கண்டிப்பாக
 வின்டோஸ் xp இருந்தால் மட்டுமே ஆன்ட்ராய்ட்  OS பெறமுடியும் . வின்டோஸ் 7 இல் வேலை செய்யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்
சரி வாருங்கள் ஆன்ட்ராய்ட் OS பெறும் வழிமுறை அறிவோம்
முதலில் கீழ்கண்ட பதிவிறக்கச்சுட்டிகளின் மூலம் ஆன்ட்ராய்ட் 2.3 OS யினை பதிவிறக்கிக்கொள்ளுங்கள்  முதல் பதிவிறக்கச்சுட்டியில் HDMI போர்ட் உள்ள டேபிளட்டிற்கானது  இரண்டாவது பதிவிறக்கச்சுட்டி HDMI போர்ட் இல்லாத டேபிளட்டிற்கானது

ஆன்ட்ராய்ட்  பதிவிறக்கம் செய்து விட்டீர்களா 
உங்களுக்கு WIN Rar ZIP பார்மெட்டில் ஒரு File கிடைத்து இருக்கும் அதை unzip செய்து கொள்ளுங்கள் இப்பொழுது உங்களுக்கு கிடைத்து இருக்கும் போல்டரை திறந்தால் உள்ளே இரண்டு போல்டர் போல்டர்கள் இருக்கும் அதில் iuw1.2(Tool)எனும் போல்டரை திறந்து கொள்ளுங்கள் அதில் அதில் iuw1.2எனும் .exe பைல் இருக்கும் அதை ரன் செய்யுங்கள் . கீழே உள்ளது போல் ஒரு விண்டோ திறக்கும்

 அதில் Choose on SD card எனுமிடத்தில் நீங்கள் மெமரி கார்டினை USP போர்டினுள் பொருத்தியிருந்தால் Removeable Diskஎன வந்து இருக்கும் தற்போது அதற்கு மேல் pathஎனுமிடத்தில் Browse என்பதை கிளிக் செய்து நீங்கள் பதிவிறக்கம் செய்த போல்டரினுள் முதல் போல்டரில் IS701cAndroid .ius என முடியும் Wrapped இமேஜ் வடிவில் இருக்கும் file ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள்







 தற்பொழுது burn எனும் பட்டனை கிளிக் செய்யுங்கள் ஆன்ட்ராய்ட் os ஆனது உங்களது மெமரி கார்டினில் burn ஆகதொடங்கும் .

 burn completeஎன வந்த பிறகு உங்களது டேபிளட்டில் Micro SD மெமரி கார்டினை சொருகி பவர் பட்டினை ஆன் செய்யுங்கள் அதன் பின்பு டேபிளட் ஸ்கீரீனில் சொல்லப்படும் எளிய வழிமுறைகளை பின்பற்றி உங்களது டேபிளட்டினில் ஆன்டிராய்ட் 2.3  os பதிவு செய்து கொள்ளுங்கள் .   சந்தேகங்கள் இருப்பின் கருத்துரையில் கேட்கவும் 

Friday 14 December 2012

கவனிக்க தவறிய இந்திய கணித மேதை காப்ரேகர்

,
பூச்சியத்தை கண்டறிந்து கணிதம் தழைத்தோங்க இந்தியா உதவினாலும் ஆர்யப்பட்டர், பாஸ்கரர், பிரம்மகுப்தர், சீனிவாச இராமானுஜம் போன்ற ஒரு சில இந்திய கணிதமேதைகளே புகழ் அடைந்தனர் . அவர்களின் வரிசையில் கணிதத்தில் பல ஆய்வுகள்  செய்த காப்ரேகர் எனும் இந்திய கணிதமேதையை கவனிக்க தவறிவிட்டோம் வாருங்கள் நண்பர்களே அவரின் வரலாற்றினை புரட்டிப்பார்ப்போம்
பிறப்பும் இளமைபருவமும்
காப்ரேகர் 1905 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி மும்பாய்க்கு அருகில் தஹானூ என்னுமிடத்தில்  இராமசந்திர தேவகாப்ரேகருக்கும் ,ஜானகிபாய் என்பவருக்கும் மகனாய் பிறந்தார் . தந்தை ஜாதக தொழில் செய்து வந்தாலும் குடும்பம் என்னவோ  ஏழ்மையில் சிக்கிதவித்தது தனது 8 வயதில் தாயை இழந்த காப்ரேகர்  தன் மாமாவின் அரவணைப்பில் உயர்நிலைப்பள்ளி படிப்பை தொடர்ந்தார்  வகுப்பில் மிக சாதாரண மாணவனான காப்ரேகருக்கு கனித ஆசிரியரை மட்டும் மிகவும் பிடித்து போனது .கணித ஆசிரியரின் புதிர்கணக்குகளும் , சுருக்குவழிகளும் எண்கணிதத்தில்  ஈடுபாட்டை வளரச்செய்தது  தனது தந்தை ஜாதக தொழில்  இருந்ததால் ஜாதக கணிதத்தின் மீதும் ஆர்வம் வந்தது .
ஆசிரியர் பணி
மும்பையின் அருகே உள்ள தேவ்லாலி என்னும் ஊரில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியாராக 1930 முதல் 1962 வரை முப்பதாண்டுகள் பணிபுரிந்தார் 1932 இல் இந்திராபாய் என்பரை திருமணம் செய்து கொண்டார்.  பள்ளியில் கணக்கு ,அறிவியல் ,சமஸ்கிருதம் ஆகியவற்றை கற்பித்தார்
கணிதத்திற்கு ஆற்றிய தொண்டுகள்
கணிதத்தில் முதுகலைபட்டம்கூடா பெறாத ஒரு சாதரண பள்ளி ஆசிரியரான காப்ரேகரின் கணித சமன்பாடுகளை கொண்டு இன்று பலர் ஆராய்ச்சியாளர் பட்டம் பெற்று  வருகின்றனர் .தனது கணித ஆராய்ச்சிக்காக யாரிடம் சென்று உதவி கேட்டதில்லை தனி ஒரு மனிதனாக நின்று கல்லூரிகளுக்கும் பல்கலைகழகங்களுக்கும் சென்று சொற்பொழிவு ஆற்றினார் தனது ஆராய்ச்சிக்கட்டுரைகளை இந்திய மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சி சஞ்சிகைகளில் வெளியிட்டார் .என்கணித குறிப்புகள் பலவற்றை கொண்டு சில நூல்களையும் எழுதியுள்ளார் . விஜயாஎண்கள் , மந்திஎண்கள் , தாத்ரேய எண்கள் ,ஹர்ஷத்எண்கள்,டெம்லோ எண்கள்,பல்வேறு மாயசதுரங்கள் என விளையாட்டுக்கணிதம்எனும் Recreational Mathematics பிரிவில் பல புதிர்களையும் அவற்றிற்கான விடைகளையும் காணுவதிலே தம் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார் . இராமனுஜத்திற்கு ஒரு ஹார்டி தேவைப்பட்டதைப்போல  காப்ரேகருக்கும் ஒருவர் தேவைப்பட்டார் அவர்தான் மார்டின் கார்ட்னர் . பொழுதுபோக்கு கணிதம்எனும் கணித துறையில் புகழ்பெற்ற மார்டின் கார்ட்னர் காப்ரேகரை புகழ்ந்து Scientific Americanஎனும் பத்திரிக்கையில் புகழ்ந்து எழுதியபிறகுதான் உலகம் முழுவதும் காப்ரேகர் கவனிக்கப்பட்டார்  .ஸ்வீடனில் வெளியான கணித அறிஞர்களின்  பட்டியலில் ஒரு சிறந்த கணித விஞ்ஞானி என போற்றப்பட்டார்

Monday 22 October 2012

திசைமாறும் பறவைகள் அறிவியல் விளக்கம் - வலைசைபோதல்

,

பண்டைய தமிழர்கள் ,கிரேக்கர்கள்,ரோமானியர்கள், எகிப்தியர்கள் பறவைகளை செய்தி அனுப்ப பயன்படுத்தி வந்தனர் பறவைகள் வலசைபோதலைப்பற்றி நமது இலக்கியங்களில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனாலும் பரிமாணக்கொள்கைப்படி வலசைபோதல் என்றால் என்னவென்று அறிந்து கொள்வோம் .
பரிமாணக்கொள்கைப்படி வலசைபோதல் 
பூமியின் வடதுருவத்தில் தோன்றிய பறவையினம் பிளிஸ்டோசின் காலத்தின் இறுதிப்பகுதி வரை வசித்தபின்  அங்கே பனிக்கட்டிகள் தோன்றிய பூமியின்  தென் அரைக்கோளத்திற்கு சென்றுவிட்டு வடதுருவத்தில் பனி குறைந்தபின் மீண்டும் வடதுருவத்திற்கு திரும்பின
மீண்டு திரும்பும் பறவைகள்
பறவைகள் அற்புதமான வழியறியும் உயிரினம் ஆகும் வலசை செல்லும் பறவைகள் சூரியன், காற்றுவீசும் திசை ,நிலக்குறியீடுகள், நிலா , நட்சத்திரங்கள் , புவியீர்ப்புவிசை , பூமியின் காந்தப்புலம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள்  வலசை சென்றுவிட்டு மீண்டும் தன் வாழிடத்திற்கே திரும்புவது அதிசயமான ஒன்றுதான்
பறக்கும் வேகம் – டாப்ளர் ரேடர்
வலசை செல்லும் சில வகை பறவைகள் மணிக்கு 90 கி.மீ தூரத்தை கடக்க கூடியன  வலசை பறவைகளின்  வேகமானது டாப்ளர் ரேடார் மூலம் கணக்கிடப்படுகிறது . ஒலி மூலத்தின் சலனத்தாலோ காற்றின் சலனத்தாலோ ஒலியின் அதிர்வெண்ணில் மாறுதல் ஏற்படுவது போல தோன்றுவது டாப்ளர் விளைவு ஆகும் இதன் அடிப்படையில் அமைந்தது டாப்ளர் ரேடார் ( டாப்ளர் விளைவினை மிக எளிதாக விளங்கி கொள்ள  புகைவண்டி நிலையத்தில் நிலையாக நிற்பவரை நோக்கி வரும் புகைவண்டியின் ஊதல் ஒலி அருகில் வர வர அதிகமாகும் அதை போலவே புகை வண்டி விலகிச்செல்ல செல்ல ஊதல் ஒலி குறைந்து கேட்கும் )
வலசை போக காரணம்
பறவைகளின் சிற்றினங்களுக்குள் ஏற்படும் உணவு, எல்லை , கூடுகட்டுமிடம்  ஆகிய காரணங்களுக்காக போட்டிகள் ஏற்படுகின்றன எனவே வேறு இடங்களுக்கு இடம்பெயரும் தேவை ஏற்படுகிறது மேலும் சூழல்மாற்றம் , காற்றுதிசைமாற்றம் ஆகியவை பறவைகள் வலசை செல்ல தூண்டுகின்றன  பறவைகள் வலசைசெல்வது  மரபியல்படி அவைகளுக்கு உதவுகிறது  அதிகதூரம் பயணிக்கும் பறவை குளிர்கால வாழிடங்கள் , மிதவெப்ப நாடுகளில் பல்வேறு இனப்பெருக்க பகுதிகளை தேர்ந்தெடுக்கிறது  அங்கு நிலவும் வெவ்வேறு சூழல் மற்றும் தகவமைப்பு பகிர்வுகளினல் திடீர்மாற்றம் ஏற்பட்டு  புதிய இனங்கள் தோன்றி பரிமாண வளர்ச்சி வீதம் அதிகரிக்கிறது
பறவைகள் வலசை செல்வதை அறியும் முறைகள்
பல்வேறு வகையான பறவையினங்கள் இரவுநேரத்திலும்,பகல்நேரத்திலும்  வலசைபோகின்றன பனிமூடிய சிகரங்கள் , பெருங்கடல்கள் வழியே செல்லும் அவற்றை ஆய்வு செய்வது கடினம் ஆனாலும் ரேடியோடெலிமெட்ரி முறையிலும் , பறவைகாலில் வளையமிடுதல் முறையின்மூலமும் பறவைகள் வலசைபோதலை அறிவியல் அறிஞர்கள் கண்டறிகின்றனர்
ரேடியோடெலிமெட்ரி என்பது பறவையின் கழுத்துப்பகுதியில் மிகநுண்ணிய டிரான்ஸ்மீட்டரை பொருத்தி பறவைகள் பறந்து செல்லும் பகுதிகளை ரீசிவர் மூலம் கண்காணித்தல் ஆகும் .
பறவை காலில் வளையமிடுதல் முறை என்பது பரவலாக அனைத்து நாடுகளும் பின்பன்றும் ஒரு முறையாகும் வண்ண பிளாஸ்டிக் வளையங்களில் எண், நாடு, நிறுவனப்பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு அதை பறவையின் காலில் கட்டி விடுகின்றனர் வண்ணவளையமிடப்பட்ட அயல்நாட்டுப்பறவைகள்  வலைகள் மூலம் பிடிக்கப்பட்டு இரு நாடுகளின் வலசை ஆய்வு மையங்கள் தகவலை பறிமாற்க்கொள்ளுகின்றன . அமெரிக்காவின் லாரல் மற்றும் மேரிலாண்ட் நிறுவனம் 30 மில்லியன்  வண்ணவளைய தகவல்களை பதிவு செய்துள்ளது  இந்தியாவில் பறவையியல் நிபுணரான டாக்டர் சலீம் அலி அவர்களின் தலைமையில் மும்பாய், ராஜஸ்தானின் பரத்பூர் , மற்றும் தமிழ்நாட்டின் கோடியக்கரை  போன்ற பகுதிகளில் வண்ணவளையங்களை ஆய்வு செய்ய ஆய்வு மையங்கள் உருவாக்கப்பட்டன . பல தன்னார்வ பறவையாளர்கள் உலகெங்கும் பறவை வலசைபோதலை ஆராய்ந்து வருகின்றனர் .


Sunday 14 October 2012

பிரியங்களில் ஒளிந்திருக்கும் பிரிவுகள்

,

காமம் தின்ற
பின்னிரவின்
கடைசி வினாடியை
நீளச்செய்யும்.....
உன் பிரியங்களில்
ஒளிந்திருக்கிறது
என்னை உதாசீனப்படுத்தும்
போது உதிர்க்கும்
வார்த்தைகள் !

காற்றில் அலையும் பித்தனின் மொழி

,

போகுமிடமெல்லாம்
அந்தரத்தில் கையையாட்டியபடி
காலத்தின் பக்கங்களில்
தன் வாழ்வை
கிறுக்கிச்செல்லும்
பித்தனின்
மொழி
காற்றிலெங்கும் அலைகிறது
மனிதத்தின் முகவரி
தேடி

Monday 1 October 2012

Tower of Hanoi - கணிதப்புதிர்

,

நண்பர்களே நாமது குழந்தைகள் செய்து மகிழ மிகவும் சுவையான கணிதப்புதிர் விளையாட்டினை பார்ப்போம் இந்த புதிர் இந்தியாவின் காசி நகரை மையமாக வைத்து தோன்றியது

நிலையாக நிறுத்தி வைக்கப்பட்ட மூன்று குச்சிகள் உள்ளது அதில் ஒரு குச்சியில் ஒரு சிறு தட்டு அதன் மேல் சற்று பெரிய தட்டு அதன் மேல் இன்னும் கொஞ்சம் பெரிய தட்டு என வரிசைகிரமமாக ஏறு வரிசையில் அமைந்த சில தட்டுகள் உள்ளது இப்போது புதிர்  என்னவெனில்
மேலிருந்துதான் தட்டுக்களை  வரிசையாகத்தான் எடுக்க வேண்டும். நடுவில் உள்ளதையோ அடியில் உள்ளதையோ மாற்றி மாற்றி  எடுக்க கூடாது.
ஒருமுறை ஒரு தட்டை மட்டும்  எடுத்து மற்றொரு குச்சியில் பொருத்த வேண்டும்.
பெரியதட்டின் மேல்தான் சிறிய தட்டை வைக்க வேண்டும் சிறியதட்டின் மேல் பெரிய தட்டினை வைக்க கூடாது .
அருகில் உள்ள படத்தினை பாருங்கள் அடியில் உள்ள பழுப்பு மிக பெரிய தட்டு நீலம் அதைவிட சிறியவை நீல தட்டும் மஞ்சள் தட்டும் கடைசியில் உள்ள சிவப்புதட்டு எல்லாவற்றையும் விட மிக மிக சிறியது முதலில் சிவப்புத்தட்டினை எடுத்து காலியாக உள்ள இரண்டு குச்சிகளில் ஏதாவது ஒன்றில் பொருத்தவேண்டும் அடுத்தபடியாக மஞ்சள் தட்டினை எடுக்க வேண்டும் மஞ்சள்தட்டினை சிவப்புதட்டின் மீது பொருத்த முடியாது  ஏன் எனில் மஞ்சள் தட்டினைவிட சிவப்புதட்டு சிறியது எனவே மீதி காலியாக உள்ள குச்சியில் பொருத்த வேண்டும் . இப்பொழுது நீல தட்டினை  எடுக்க முடியாது ஏன் எனில் நீலத்தட்டினை எடுத்து எதன் மீதும் பொருத்த முடியாது மஞ்சளும், சிவப்பும் நீலத்தட்டினைவிட சிறியது.  எனவே மிகச்சிறிய சிவப்பு தட்டினை எடுத்து அதைவிட பெரிய தட்டான மஞ்சள் தட்டின் மேல் வைக்க வேண்டும் இப்பொழுது நீல தட்டினை  எடுத்து காலியாக உள்ள குச்சியின் மேல் பொருத்தலாம் மீண்டும் இதே வழிமுறையை தொடர வேண்டும் .

இந்த புதிருக்கான தீர்வு 2n – 1 கணித சூத்திரம் ஆகும்
மூன்று தட்டுகள் எனில்  7 நகர்தல்களில் அதே வரிசை கிரமத்தில் மற்றொரு இடத்தில் நகர்த்த வேண்டும்
 23-1=8-1=7
 நான்கு தட்டுகள்  எனில் 15 நகர்தல்களில் செய்ய வேண்டும் மூன்று அல்லது நான்கு தட்டுகள் இருந்தால்   எளிமையாக செய்யலாம் ஆனால் தட்டுகளின்  எண்ணிக்கை அதிகரித்தால்  இதை செய்வது கடினம் முறையான பயிற்சி இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட நகர்தல்களில் செய்ய முடியும்

பாதசாரிகளின் கவனத்திற்கு கற்பழிப்பு கூடாரங்கள் ஜாக்கிரதை !

,

அதிகாரவர்க
சாக்கடைப்புழுக்களின்
சல்லாபதேவைக்கு
காக்கிச்சட்டைகளால்
ஜனநாயகம்
கதற கதற
கற்பழிக்கப்படுவதால்
பாதசாரிகளின் கவனத்திற்கு
கற்பழிப்பு கூடாரங்கள் ஜாக்கிரதை .

Tuesday 25 September 2012

ஆல்பிரட் நோபல் மரணத்தின் வியாபாரியா சமாதானத்தின் தூதுவரா ?

,


நோபல் பரிசு இந்த ஒரு அங்கீகாரத்திற்காக உலகின்  அனைத்து விஞ்ஞானிகள் மட்டுமல்ல இலக்கியவாதிகளும்,
 சமூகவியல் அறிஞர்களும்
அயரது பாடுபட்டு வருகின்றனர் . ஒவ்வொரு நாட்டின் குடிமகனும் தனது
நாடு நோபல் பரிசு வாங்கி விட்டால் பெருமிதம் கொள்கிறான் .
ஆனால் இந்த நோபல் பரிசை நிறுவிய ஆல்பிரட் நோபல் மரணத்தின் வியாபாரி
என உலகமே அவரை  திட்டித்தீர்த்தது  என உங்களுக்கு தெரியுமா ?
வாருங்கள் நண்பர்களே வரலாற்றை புரட்டிப்பார்ப்போம்

ஆயுதவியாபாரியின் மகன்
கிபி 1833 அக்டோபர் மாதம் 21 தேதி ஸ்வீடனின் ஸ்டாக்கோம் நகரில் பிறந்தார்
தந்தை இம்மானுவேல் துப்பாக்கி, பீரங்கி போன்ற ஆயுதங்களைச்செய்யும்
ஒரு புகழ்பெற்ற ஆயுதவியாபாரி தந்தையுடன் சேர்ந்து போர்
ஆயுதங்கள் செய்யும் தொழிலில் ஆல்பிரட்  ஈடுபட்டார்
ஆயுத தயாரிப்பு தந்தைக்கும் மகனுக்கும் பெரும் பொருள் ஈட்டித்தந்தது


நீரில் மிதக்கும் கன்னி வெடிகள்
கிபி 1853 முதல் 1856 வரை நடை பெற்ற கிரீமிய போரில்  கப்பல்களை
வெடித்து சிதறவைக்க நீரில் மிதக்கும் கன்னி வெடிகளை தந்தையும் மகனும் சேர்ந்து தயாரித்தனர் .
மிதக்கும் கன்னி வெடியில் ஒரு கண்ணாடி குழாயில் கந்தக அமிலம் இருக்கும்
கண்ணாடிகுழாய் கப்பலில்  மோதி  உடையும் போது கந்தக அமிலமானது
பொட்டாசியம் குளோரேட் மற்றும் கந்தகம் கலந்த கலவையின் மீது கொட்டும்
இதனால் வெடி விபத்து  ஏற்படும் ஆனால் இந்தகைய வெடிகளினால்
பெரிய போர்கப்பல்களுக்கு சேதத்தினை  ஏற்ப்படுத்த முடியவில்லை
எனவே புதிய திறன் மிக்க வெடிபொருள் கண்டுபிடிக்க வேண்டும்
என ஆல்பிரட் ஆராய்ச்சியில் இறங்கினார்.

புதிய  எமன்

1847 இல்  நைட்ரோகிளிசரின்  என்ற வெடிக்கும் தன்மையுடைய திரவம் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது .
சாதாரன வெப்பநிலையில் கூட நைட்ரோகிளிசரின் திரவத்தை கையாளுவது
மிகா ஆபத்தாக இருந்தது ஆனால் ஆல்பிரட்டோ நோபல்  நைட்ரோ கிளிசரின்
மூலம் திறன் மிக்க வெடிபொருளை உருவாக்க முடியுமென தீர்க்கமாக
நம்பியதல் தன்னுடைய ஆயுத தொழிற்சாலையில் அதன் மீது பல
ஆய்வுகளை நடத்தி நைட்ரோ கிளிசரினை வெடிக்க வைக்க ஒரு
கருவியை கண்டுபிடித்து 1863 இல் பேடன்ட் உரிமையையும் வாங்கி
விட்டார். ஆனல் 1864 இல் நோபலின் தொழிற்சாலையில்  நைட்ரோகிளிசரினால்
பெரிய வெடி விபத்து  ஏற்பட்டது இந்த விபத்தில் ஆல்பிரட் தன்னுடைய தம்பி
எமில் மற்றும் நான்கு தொழிலாளர்களும் இறந்து போயினர் இதன் காரணமாக
அரசு ஆல்பிரட்டின் நைட்ரோகிளிசரின் வெடி தயாரிப்புக்கான உரிமத்தை
இரத்து செய்து விட்டது  எனவே தம் தொழிற்சாலையை ஜெர்மனியில்
உள்ள ஹாம்பர்க் நகருக்கு மாற்றினார் நைட்ரோகிளிசரினை விற்று பெரும்
பொருள் சம்பாதித்தார் ஆனால்  நைட்ரோகிளிசரினில் இருந்த  அபாயத்தை
குறைக்க முடியவில்லை ஆல்பிரட் நோபல் கப்பல்களில்  நைட்ரோகிளிசரினை
அனுப்பும்போது துத்தநாகபீப்பாய்களில் அடைத்து அதை மரப்பெட்டிகளில்
வைத்து
அதை சுற்றிலும் மரத்தூளை நிரப்பி அனுப்புவார் ஆனால் இந்த பம்மாத்து
வேலைக்கெல்லாம்  அடங்கவில்லை நைட்ரோகிளிசரின்  எமன் இதனால்
விபத்துக்கு மேல் விபத்து ஏற்ப்பட்டது .உலகெங்கும்  நைட்ரோகிளிசரினை
எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றது இதனால் பல நாடுகள்
நைட்ரோகிளிசரினுக்கு தடை போட ஆரம்பித்து விட்டனர்
எங்கே தனது ஆயுததயாரிப்பிற்கு மிகப்பெரிய பொருளாதார பேரழிவு
ஏற்பட்டுவிடுமோ  என அஞ்சினார்  ஆல்பிரட் நோபல்  எனவே
நைட்ரோகிளிசரினை ஆபத்தில்லாமல் கையாள ஒரு வழியை கண்டுபிடிக்க
அயராது பாடுபட்டார் ஆல்பிரட்நோபல் .

டைனமைட் தாண்டவம்

தனது தொழிற்சாலை அமைந்துள்ள ஹம்பர்க் நகரின் அருகே உள்ள
மலைக்குன்றுகளில் கிடைக்கும் ஒரு வகை ஒரு வகை
களிமண் நைட்ரோகிளிசரினின் வீரியத்தை அடக்கும்  என தற்செயலாக
கண்டுபிடித்தார் . அந்த களிமண் நைட்ரோகிளிசரினை  எளிதாக
ஈர்த்துக்கொண்டது அந்தக்களிமண்ணினை தேவையான வடிவத்தில்
அச்சுக்களாக செய்து ஆபத்து இல்லாமல் அனுப்ப முடிந்தது அந்த
களிமண்ணில் மேலும் மேலும் ஆராய்ச்சி செய்து அதை வெடிக்க வைத்து
வெற்றி கண்டார் 1867 இல் டைனமைட்  என பெயரிட்டு விற்பனைக்கு கொண்டு
வந்தார் .டைனமைட் வியாபாரம் சக்கைபோடு போட்டதால் உலகின்
மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர் ஆனார் ஆல்பிரட் நோபல் . ஆனாலும்
திருப்தி அடையாத ஆல்பிரட்நோபல்1875 இல் நைட்ரோ செல்லுலோஸ் மற்றும்
நைட்ரோகிளிசரின் ஆகியவற்றை சேர்த்து வெடிக்கும் தன்மையுடைய ஜெலட்டின்
என்ற பொருளை உருவாக்கினார்.1887 இல் நைட்ரோ செல்லுலோஸ்,
நைட்ரோகிளிசரின் மற்றும் கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து பாலிசைட்
என்ற வெடிபொருளை உருவாக்கினார்

விஞ்ஞான வித்தகர்
ஆல்பிரட்நோபல் டைனமைட்க்காக உலகம் முழுவதும் அறியப்பட்டாலும்
,இயற்பியல் , மின்வேதியல்,உயிரியல்,மனிதஉடலியல்,கண்பார்வையியல்
போன்றபல துறைகளில் கண்டுபிடிப்புகள் செய்து 350 க்கும் மேற்ப்பட்ட
பொருள்களுக்கு பேடன்ட் வாங்கி இருந்தார் டைனமைட் பல ஆயிரம்
பேரை கொன்று குவித்ததால் அவர் வாழ்ந்த காலத்தில் உலகம் அவரை தூற்றியது

சமாதான தூதுவராக்கிய சம்பவங்கள்

அழிவு ஆயுதங்களின் தந்தை ஆல்பிரட்நோபல்  என உலகம் தூற்றினாலும்
ஆல்பிரட்டின் அடிமனதில் அவருக்கே தெரியாமல் அன்பும் கருணையும்
துடித்துக்கொண்டு இருந்தது .ஒரு நாளிதழுக்கு கிடைத்த தவறான தகவலால்
ஆல்பிரட்நோபல் இறந்துவிட்டதாக கருதி " மரணத்தின் மொத்த வியாபாரி
இறந்துவிட்டார் "  என செய்தி வெளிட்டது அந்த நாளிதழை பார்த்த
ஆல்பிரட்நோபலுக்கு வருங்காலம்  தன்னை எவ்வாறு சொல்லப்போகிறது
என சிந்திக்க தொடங்கினார் மேலும் ஆல்பிரட் நோபலிடம் ஒரு காலத்தில்
பணியாற்றிய பார்த்தா எனும் பெண்மனி மனிதாபிமானமும் உலக சமாதானத்தில்
ஆர்வமும் கொண்டவர் அவர் எழுதிய "ஆயுதங்களை கீழே போடுங்கள்"
எனும் புத்தகம் உலகம் முழுவதும் புயலை கிளப்பியது அதனால் பலர் சமாதான
வழிக்கு திரும்பினர் ஒருமுறை பார்த்தா தன்னுடைய முன்னாள் முதலாளியுடன்
உரையாடும் போது அவரால் உலகில்  ஏற்ப்பட்ட ஆயுத பெருக்கத்தினையும் அதனால்
ஏற்ப்பட்ட உயிர் இழப்புகளையும் கண்ணீருடன் குறிப்பிட்டார் ஆனால் அதை
ஏற்றுக்கொள்ள ஆல்பிரட்டின் கௌரவம் இடம் தரவில்லை பேரழிவு ஆயுதங்கள்
இருந்தால் மற்ற நாடுகள் போர் செய்ய தயங்கும் அதனால் உலகில் சமாதானம்தான்
பெருகும்  என்று கூறி சமாளிக்கப்பார்தார் ஆனால் பார்தாவின் வாதங்களுக்கு அவரால்
பதில் கூற முடியவில்லையானலும் அவற்றை  ஏற்றுக்கொள்ள ஆல்பிரட் தயாராக
இல்லை  எனவே இனி உங்களை நான் சாகும் வரை சந்திக்கவே மாட்டேன் என
கூறிவிட்டு பார்த்தா சென்றுவிட்டார்

நோபல் பரிசு உதயம்

திருமணம் செய்து கொள்ளாமலே வெடிபொருள் ஆராய்ச்சி ,
பணத்தை தேடல்  என்று வாழ்க்கையை கழித்த ஆல்பிரட்டின் கடைசிகாலத்தில்
தனிமை அவரை வாட்டியது வாழ்வின் மீதான புரிதல்கள் அவருக்கு பிடிபட
தொடங்கியது தன்னுடைய கண்டுபிடிப்புகள் எத்தனை ஆயிரம் உயிர்களை
கொன்றுள்ளது இன்னும்  எத்தனை கோடி உயிர்களை கொல்லும்  என்ற
எண்ணம் அவர் நெஞ்சை பதற வைத்தது  எனவே 1985 நவம்பர் மாதம்
தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் ஒரு அறக்கட்டளையாக்கினார் அதிலிருந்து கிடைக்கும் வட்டியை கொண்டு இயற்பியல்,வேதியியல்,மருத்துவம்,இலக்கியம்,
உலகசமாதானம்  ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு பரிசுகள்
கொடுக்கச்செய்தார் .முதல் நோபல் பரிசுகள் 1901 ஆம் ஆண்டு முதல்
வழங்கப்படுகிறது உலக மக்களுக்கு பயன்படும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு
அங்கீகாரமு, உலக சமாதானத்திற்கு ஊக்கமும் கொடுத்தால் உலகில் அமைதி
ஏற்படும்  என நம்பினார் 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் இறந்தார்

டிஸ்கி

1905 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு பார்த்தாவிற்கு கிடைத்தது







Monday 17 September 2012

TNPSC போட்டித்தேர்விற்கான தமிழ் இலக்கண ஒலி நூல்கள் TNPSC Tamil Ilakkanam Audio Book

,


நண்பர்களே TNPSC போட்டித்தேர்விற்காக தமிழ் இலக்கன மென்நூல்களை ஒலி வடிவில் பதிவிட்டு 
உள்ளேன் . இதில் தமிழ் இலக்கணம்  ஒலி  வடிவில் தெளிவாக விளக்கப்பட்டு உள்ளது  இணைய தேடலில் எனக்கு 
கிடைத்த ஒலி  நூல்களை  உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்   கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம் பதிவிறக்கி 
பயன் பெறுங்கள்

Wednesday 12 September 2012

TNPSC தேர்விற்கான தமிழ் இலக்கண மென்நூல்கள் – Tamil Elakkanam PDF

,

நண்பர்களே TNPSC போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவரா நீங்கள் உங்களுக்கு அவசியம் தேவைப்படும் தமிழ் இலக்கண மென்நூல்களை பதிவிட்டுள்ளேன் இவற்றில் தமிழ் இலக்கணப்பகுதிகள் முழுமையாக விளக்கப்பட்டு உள்ளது இணைய தேடலில் எனக்கு கிடைத்த நூல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி எனக்கு கீழே உள்ள  பதிவிறக்கச்சுட்டி மூலம் பதிவிறக்கி பயன்பெறுங்கள்



Saturday 8 September 2012

ஏழ்மையினால் படிப்பை கைவிட்டாலும் உலகை திகைக்க செய்த விஞ்ஞானி

,

அமெரிக்காவின் தலைசிறந்த அரசியல் அறிஞரும் உலகம் போற்றும் விஞ்ஞானியுமான பெஞ்சமின் பிராங்கலின் குடும்ப வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை கைவிட்டு பத்து வயதிலே வேலைக்கு பேனவர் என்று உங்களுக்கு தெரியுமா ? வாருங்கள் நண்பர்களே அந்த வியத்தகு விஞ்ஞானியின் வரலாற்றை புரட்டிப்பார்ப்போம் .

அமெர்க்காவின் பாஸ்டன் நகரில் எளியகுடும்பம் ஒன்றில் பிறந்த பிராங்கலின் குடும்ப வறுமையின் காரணமாக பள்ளி படிப்பை கைவிட்டு விட்டு 10 வயதிலே தனது தந்தையுடன் மெழுகுவர்த்தி தொழிலை மேற்கொண்டார் . ஆனால் அவருக்கு அந்த தொழில் பிடிக்கவில்லை ஆதலால் அச்சுக்கூடத்தில் வேலைக்கு சேர்ந்தார் . சிறு வயதிலே அச்சுக்கூடத்தை தனியாக நிர்வாகாம் செய்யும் அளவிற்க்கு திறமையை வளர்த்துக்கொண்டார் .

பட்டினி இருந்தும் அறிவை வளர்தவர்

அச்சுத்துறையில் பணியாற்றியதால் பலவகையான் நூலக்ளை வாசிக்கும் பழக்கம் ஏற்ப்பட்டது . பள்ளிப்படிப்பை கைவிட்டாலும் தன்னுடைய உணவுச்செலவை குறைத்துக்கொண்டும் சில நேரங்களில் பட்டினி இருந்தும் பணத்தை மிச்சப்படுத்தி பல வகையான நூல்கள் வாங்கி படித்தார் தனது இருபது வயதில் தனியாக அச்சுக்கூடத்தை நிறுவி நூல்களை வெளியிட்டார் .அறிவை வளர்க்கும் தரமான நூல்கள் கிடைக்காமல் தான் பட்ட கஷ்டங்களை மக்கள் படக்கூடாது என்பதற்காக  முதன் முறையாக நடமாடும் நூல் நிலையம் ஒன்றினை அமைத்தார்

அறிவியல் சாதனைகள்

பிராங்லின் தனது 38 ஆம் வயதில் அறிவியல் துறையில் நிலைமின்சாரம் ஆராய்ச்சியில் இறங்கினார் லண்டன் நகரில் மின்புயலின்(Electric storm) போது பட்டம் ஒன்றை பறக்கவிட்டு மின்னல் மின்னாற்றலால் ஏற்படுகிறது என்று உலகிற்கு அறிவித்தார் மேலும் இடி இடிக்கும்போது கூர்மையான இரும்பு கம்பியை உயரமான கட்டிடத்தில் வைத்து அதை ஒரு கம்பி வழியாக பூமியில் செலுத்தும் இடிதாங்கி தத்துவத்தையும் கூறினார். ஜரோப்பா முழுவதும் இவரது ஆய்வினை அறிந்ததோடு மட்டுமில்லாமல் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்த்தும்  வெளிட்டனர்.

உலகை திகைக்க செய்த சோதனை

மின்னேற்றத்தை சேமிக்கும் லெய்டன் ஜார் (leyden jar) எனப்படும் குடுவை உட்புறம் நீரினை நிரப்பிக்கொண்டார் அதன் வெளிப்புறம் உலோகமுலாம் பூசப்பட்டது. இந்த ஜாடியினை மின்னேற்றம் செய்தார் பின் ஜாடியில் இருந்து நீரினை கொட்டி விட்டு புதிதாக நீரினை நிரப்பினார் அப்போதும் ஜாடி மின்னேற்றம் கொண்டு இருந்தது அதுவரை அறிவியல் உலகம் நீரில் தான் மின்னேற்றம் இருக்கும் என நம்பி வந்தது ஆனால் தனது லெய்டென் ஜார் சோதனை மூலம் மின்னேற்றம் ஜாடியின் நீரில் இல்லை கண்ணாடியில் இருந்தது என நிறுவிக்காட்டினார் இந்த தத்துவம்மூலம் தொலைக்காட்சி , வானொலிகளில் பயன்படும் parallel plate capacitor ஐ கண்டுபிடித்தார் .
நவீன மின் இயற்பியலுக்கு அடிப்படை
இன்றை அறிவியல் எலக்ட்ரான்களின் ஓட்டமே மின்சாரம் என்று கூறுகிறது இதை பதினேழாம் நூற்றான்டிலே தனது மின்சாரம் பற்றிய பாய்மக்கொள்கை(Fluid Theory of Electricity ) யில் பிராங்கலின் கூறியுள்ளார் அதன் சாரம்சம் இதுதான் “ அனைத்து பொருள்களும் ஓரளவு மின் பாய்மத்தை தன்னுள்ளே கொண்டு உள்ளது ஒரு பொருள் மின் பாய்மத்தை ஏற்க்கவோ அல்லது இழக்கவோ செய்யும் அது பாய்மத்தை ஏற்றாலும் இழந்தாலும் மின்னேற்றம் கொண்டதாக மாறிவிடுகிறது மின் பாய்மத்தை ஏற்றால் நேர்மின்னோட்டம், மின்பாய்மத்தை இழந்தால் அது எதிர் மின்னோட்டம் “
பிராங்லின் இந்த தத்துவம் தான் இன்றைய நவீன மின் இயற்பியலுக்கு அடிப்படை
ஏழ்மையால் பள்ளிப்படிப்பை பத்து வயதிலே நிறுத்திய பெஞ்சமின் பிராங்கலின் அரசியலில் பல பதவிகளை பெற்று உயர் நிலையை அடைந்ததோடு மட்டுமல்ல அறிவியல் துறையிலும் பல சாதனைப்படைத்தார் . தனது 85 ஆம் வயதில் இறந்தார்

Friday 7 September 2012

தொலைந்து போன நாட்குறிப்பின் கடைசி பக்க காதல்

,
தொலைந்து போன
நாட்குறிப்பின்
கடைசி பக்கத்திலிருக்கும்
உன் புகைப்படத்திற்கு
தெரியுமா ?
தொலைந்து போனது
நீயும் தானென்று ?

Wednesday 5 September 2012

ஐன்ஸ்டீன் ஒளியை வளைத்தாரா ?

,
ஒளி நேர்க்கோட்டில்தான் செல்லும் மின்விசையோ, காந்த விசையோ ஒளியை வளைக்க முடியாது என்பது பள்ளில் நாம் படித்தது ஆனால் ஐன்ஸ்டீனோ ஒளியை வளைக்க முடியும் என்று கூறினார் அக்கூற்று மெய் எனவும் நிறுபிக்கப்பட்ட  நிகழ்வு உங்களுக்கு  தெரியுமா ?
முதலில்  ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் பற்றி தெரிந்து கொள்வோம்
ஒரு இரப்பர் விரிப்பின் நடுவே இரும்பு குண்டை வைத்தால் அதன் விளைவாக ஒரு பள்ளம் ஏற்படும் . அதன் அருகே வேறு ஒரு குண்டை வைத்தால் வளைவில் வளைந்தோடும் அல்லவா அது போல வின்வெளியில் உள்ள நிறை மிகுந்த கோள்கள், வின்மீன்தொகுதிகள் போன்றவற்றால் நமது வின்வெளியே ஆங்காங்கே குழி போல குழிந்து காணப்படும் அதன் அருகே வேறு எந்த பொருள் வந்தாலும் மிகுந்த நிறை காரணமாக அந்த பொருள்  ஈர்க்கப்படும்   ஆக மொத்ததில் வெளியின் வடிவம்எப்படி இருக்க வேண்டும் என பருப்பொருள்(Matter)   கூறுகிறது  அதே சமயம் மறுபுறத்தில் பருப்பொருள் எவ்வாறு  இயங்க வேண்டுமென வெளி கூறுகிறது .
ஒளியை வளைத்த நிகழ்வு
சூரியன் போன்ற  நிறை மிகுந்த பொருட்களின்  அருகில் ஒளி பாயும் போது ஒளி வளையும் என்று தனது புரட்சிகர கருத்தை 1915 இல் ஐன்ஸ்டீன் கூறினார்  அவ்வளவுதான்  அறிவியல் யுகம்  பொங்கி எழுந்தது  ஐன்ஸ்டீன் முட்டாள்தனமாக கூறுகிறார் . ஒளியாவது  வளைவதாவது  இதெல்லாம்  சாத்தியமே இல்லை என கூக்குரல் இட்டது ஆனால்  ஐன்ஸ்டீனோ தன் வாழ்வில் மிகப்பெரிய சாதனையை செய்து முடித்ததாக தன் மகனுக்கு கடிதம் எழுதினார்  . அவரின் ஆய்வினை ஏன் அறிவியல் உலகம் உடனடியாக ஏற்கவில்லை எனில் ஒளியானது சில சமயம்  அலை போலவும் சில சமயம் துகள் போலவு செயல்படுகிறது . ஒளியின் துகளை போட்டான் என அழைக்கின்றனர் இது வினாடிக்கு சுமார் 3 இலட்சம் கிலோமீட்டர் வேகத்தில்  நேர்க்கோட்டில் செல்லும் இதன் ஆற்றல் ஒளியின் நிறத்தை பொறுத்து 1.5எலெக்ட்ரான் வோல்ட் முதல் 3.5 எலெக்ட்ரான் வோல்ட் வரை  மாறுபடுகிறது . இவ்வளவு  வேகத்தில் செல்லும் ஒளியை வளைக்க வேண்டும் எனில் எதன் மூலம் வளைப்பது , யார் வளைப்பது என பல்வேறு கேள்விகளை கேட்டனர்  ஆனால் 1919 இல் ஐன்ஸ்டீனின் கூற்றை மெய் என நிறுபனம்  செய்ய  ஐன்ஸ்டீனின் தீவிர ஆதரவாளர் ஆர்தர் எடிங்டன் எனும் விஞ்ஞானிக்கு ஒரு வாய்ப்பு கிட்டியது 1919 மே 29 ஆம் தேதி  நடைபெற்ற  முழு சூரிய கிரகணத்தை ஆராய  உலகின் இரண்டு மூலைகளுக்கு  இரண்டு குழுக்களை அனுப்பினார் . ஆப்பிர்க்காவில் ஒரு குழு பிரேசிலில் ஒரு குழு என இரண்டுகுழுக்களும்  சூரிய கிரகணத்தை ஆராய்ந்தது
நடந்தது என்ன ?
முழுச்சூரிய கிரகணத்தின் போது சூரியன்  நிலாவினால் சில நிமிடங்களுக்கு  முழுமையாக மறைக்கப்பட்டது அப்போது சூரியனுக்கு பின் புறம் உள்ள வின்மீன்கள் தெரிந்தன  அதாவது ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் தத்துவப்படி  விண்மீன்களின்  ஒளி சூரியனது நிறையினால் ஈர்க்கப்பட்டதால்   ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் தத்துவப்படி குழிந்த வெளியின் மீது வரும் போது  ஒளி தனது நோர்க்கோட்டு பதையில் இருந்து விலகியது  ஆகையால் சில விண்மீன்கள் இருக்க வேண்டிய இடத்திலிருந்து  இடம் மாறி உள்ளதாக புலப்பட்டது  ஆகையால்  ஐன்ஸ்டீன் கூறியது உண்மை என நிறுபிக்கப்பட்டது .
 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates