Sunday 2 September 2012

அரசனின் ஏழு மகள்களும் முத்துக்களும் – கணிதப்புதிர்

,
ஒரு அரசனுக்கு ஏழு மகள்கள் இருந்தனர் அவனிடம் 49 முத்துக்கள் இருந்தன அதில் முதல் முத்தின் மதிப்பு ஒரு பொற்காசுகள் , இரண்டாவது முத்தின் விலை இரண்டு பொற்காசுகள் , மூன்றாவது முத்தின் மதிப்பு மூன்று பொற்காசுகள் நான்காவது முத்தின் மதிப்பு நான்கு பொற்காசுகள் இப்படியாக 49 வது முத்தின் மதிப்பு 49 பொற்காசுகள் . அரசன் தனது 49 முத்துக்களையும் தனது ஏழு மகள்களுக்கும் ஏழு  ஏழு முத்துக்களாக
பிரித்து தர வேண்டும்  ஆனால் முத்துக்களின் மதிப்பு சமமாக இருக்க வேண்டும் . நண்பர்களே உங்களால் 49 பொற்காசுகளின் மதிப்பு சமமாக பிரிக்க முடியுமா ?
முயற்சித்து பாருங்கள் இல்லை எனில் விடையை கீழே பாருங்கள்

கணிதப்புதிரின் விடை

நண்பர்களே  இந்த கணக்கு இயல்எண்களின் கூடுதலில்  அமைந்துள்ளது
1+2+3+4+................49
எனவே இயல்எண்களின் கூடுதல் காண சூத்திரம் = n(n+1)/2
                                             = 49(49+1)/2
                                             = 49(50)/2
                                             = 49(25)
                                             = 1225
அரசனுக்கு ஏழுமகள் எனவே 1225 ஐ  7 ஆல் வகுக்க
                                             = 1225/7
                                             = 175
எனவே 49 முத்துக்களின் மொத்த மதிப்பு 1225 இதை ஏழால் வகுத்தால் கிடைப்பது  175  . அரசன் தனது 49 முத்துக்களையும் தனது ஒவ்வொரு  மகள்களுக்கும் ஏழு முத்துக்களை கொடுத்தார் ஏழு முத்துக்களின் மதிப்பு 175  ஆக இருக்குமாறு பிரித்துக்கொடுத்தார்

3 comments to “அரசனின் ஏழு மகள்களும் முத்துக்களும் – கணிதப்புதிர்”

  • 7 September 2012 at 23:45
    Rasan says:

    அருமையாகவுள்ளது. பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

  • 11 April 2013 at 20:17
    Unknown says:

    SUPER..............................

  • 11 April 2013 at 20:17
    Unknown says:

    SUPER..............................

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates