Saturday, 1 September 2012

உயிர் வாழ்வின் ஆதாரமும் பரிமாணச்சங்கிலியும் அழிந்து போகுமா ?

,

இன்று உலகெங்கும் காலநிலைமாறிக்கொண்டு வருகிறது புவிவெப்பமயமாகி வருகிறது ,பனி உருகி கடல் மட்டம் உயர்ந்து சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படுகிறது  மனிதன் காடுகளை அழித்து குடியிருப்புகள் என்ற பெயரில் கான்ங்கிரீட் தீவுகளை ஏற்படுத்தி வருகிறான்  வேதிப்பொருள்களால் மண்ணை மலடாக்கியதால் உணவுத்தேவைக்கு மரபனுமாற்ற பயிர்களை உருவாக்கி வருகிறான்  இதனால் பரிமாணச்சங்கிலி உடைந்து  போகும் அபாயம் இருக்கிறது .
பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும் உயிரினங்கள் தோன்றி வாழ்ந்து வருவது இயற்கையின் தீர்க்க முடியாத புதிர்களில் ஒன்று கண்னுக்கு தெரியாத மிகமிகச்சிறிய உயிரினமான மைக்ரோபிளாஸ்மா முதல் மிகப்பெரிய நீலத்திமிங்கலம் வரை உணவுத்தேவைக்கு இயற்கையை நம்பி உள்ளன. ஆனால் விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் மனிதன் நடத்தும் விபரீத விளையாட்டில் தனது உயிர் வாழ்வின் ஆதாரமான பல்லுயிரியத்தை சேதாரமாக்கிக்கொண்டு இருக்கிறான் வாருங்கள் நண்பர்களே அந்த விபரீத விளைட்டினை எட்டிப்பார்ப்போம்.
பல்லுயிரியம்
மூன்று கோடிக்கும் அதிகமான  உயிரின வகைகள் நிலப்பரப்புகள், ஆழ்கடல், காற்றுமண்டலம் என இந்த பூமி முழுவதும் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி இருந்தாலும் மத்தியரேகைப்பகுதிகள் ,வெப்பமண்டல கடல்பகுதிகளின் பவள பாறைகளிலும் போன்ற சில பகுதிகளில் பல்வேறு வகையான உயிரினங்கள் அடர்ந்து காணப்படுகிறது . இத்தகைய அனைத்து உயிர்களும் அவற்றின் வகை மாதிரிகளுமே பல்லுயிரியம் எனப்படுகிறது. உலகெங்கும் 34 பல்லுரியப்பகுதிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளது.
பல்லுயிரியம் பயன்கள்
காலநிலை கட்டுப்பாடு
உணவுப்பொருள்கள் , மருந்து பொருட்கள், எரிபொருள் ,கட்டிடபொருட்கள்
வெள்ளம் , வறட்சி , வெப்பம் காற்று போன்றவற்றை கட்டுப்படுத்துதல்
சுற்றுச்சூழலில் மாசுக்களை நீக்குதல் என பட்டியல் நீளும் உயிர் வாழ்க்கைக்கான ஆதாரமான  பல்லுயிரியம் தற்போது வேகவேகமாக அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது அவற்றில் சில காரணங்கள்
வாழ்விடங்களின் சிதைவு
மனிதன் தன் வாழ்வியல் தேவைக்கு 80 சதவீதம் பல்லுயிரியத்தைச்சார்ந்து இருக்கிறான் ஆனாலும் நாகரீக தேவைக்கு பல்லுயிரியத்தை அதிகமாக சுரண்டுவதால் பல உயிரினங்கள் அழிவை நோக்கி செல்கின்றன .
அன்னிய உயிரினங்கள் அறிமுகம்
ஒரு பகுதி உயிரியை மற்றொரு பகுதிக்கு அறிமுகம் செய்து அப்பகுதியைச்சார்ந்த உயிரினங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்து விடும் . தமிழகத்தில் அறிமுகமான பார்த்தீனியம் செடி மற்ற தாவரங்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது
சுற்றுசூழல் மாசு
வேதிப்பொருள்கள் நிலம்,நீர்,காற்று போன்றவற்றை மாசுபடுத்துவதால் உயிரிகளுக்கு ஆபத்தாகிறது ,
பருவநிலை மாற்றம் 
வளிமண்டலத்தில் காணப்படும்  கார்பன்டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, CFC  போன்ற பசுமையக வாயுக்கள் பூமியில் பசுமைகுடில் (Green House effect ) விளைவினை ஏற்ப்படுத்துகின்றன அதாவது சூரியனிலிருந்து பெறப்படும் வெப்பத்தை இந்த வாயுக்கள் பூமியிலே தக்கவைப்பதால் பூமியின்  வெப்பநிலையை  உயருகிறது  தற்போதைய நிலை நீடித்தால் ஒவ்வொரு பத்தாண்டிற்கும் 0.3 செல்ஸியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் இதனால் ஒவ்வொரு பத்தாண்டிற்கும் கடல் மட்டம் 6 செ.மீ உயரும்  இந்நிலை நீடித்தால் 2030 இல் கடல் மட்டம் 28 செ.மீ முதல் 30 செ.மீ வரை உயர்ந்து கடலோர நகரங்கள் அழிந்துவிடும் மேலும் கடல் நீர் உட்புகுவதால் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்களும் , விலங்கினங்களும்  அழியப்போகிறது
உலகெங்கும் பல்லுயிரியத்தைக்காக்க பல்வேறு அமைப்புகள் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன பல்லுயிரியப்பகுதிகள்(Hot Spot)என அறிவிக்கப்பட்டு அதி முக்கியத்துவம் தரப்படுகிறது IUCN எனும் அமைப்பு ஆண்டுதோறும் அழியும் நிலையில் உள்ள உயிரிகளைப்பற்றி  Red Data Bookஎனும்  புத்தகத்தை
வெளியிடுகிறது
பல்லுயிரியத்தைக்காப்பது நமது மிக முக்கிய செயல் நாம் வாழும் இப்பூமியை நமது சந்ததிகளுக்கு பாதுகாப்பாக கொடுப்பது நமது ஒவ்வொருவருடைய கடமை

டிஸ்கி
பதிவின் நீளம் கருதி பல்லுரியத்தை பற்றிய பல தகவல்கள் தரப்பட வில்லை நண்பர்கள் விரும்பினால்  அதைப்பற்றிய தகவல்களை தனிப்பதிவாக இடுகிறேன்

Monday, 23 July 2012

மருத்துவ உலகையே புரட்டி போட்ட வைட்டமின் வரலாறு

,

இன்று உலகை எத்தனையோ நோய்கள் பயமுறுத்திக்கொண்டு உள்ளன ஆனால் ஸ்கர்வி ,பெரிபெரி போன்ற நோய்கள் உலகையே உலுக்கிய கதை உங்களுக்கு தெரியுமா ? இருபது லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறந்து போன சோக வரலாறு உங்களுக்கு தெரியுமா ?  வாருங்கள் தோழர்களே வரலாற்றைப்புரட்டி பார்ப்போம்

கி.பி 1453 இல் கான்ஸ்டான்டிநோபிளை கைப்பற்றிய பிறகு இந்தியா போன்ற  ஆசிய நாடுகளுக்கு புதிய கடல் வழி கண்டுபிடிப்பது அவசியமாகிபோனது இதனால் ஐரோப்பாவில் இருந்து ஆயிரக்கனக்கான மாலுமிகளும் , வியாபாரிகளும் புதிய உலகை காண மாதக்கணக்கிலும் , ஆண்டுக்கணக்கிலும் பயணங்கள் மேற்க்கொண்டனர்  இவர்களை மரண பயத்திற்கு உள்ளாக்கும் ஒரு நோய் இருந்தது அதன் பெயர் ஸ்கர்வி
பற்களில் வடியும் இரத்தத்துடன், அதீத  களைப்புடன் வெளுத்தமுகத்துடனும் மரணத்தை எதிர்நோக்கி இருக்கும்  ஸ்கர்வி பாதித்தவர்களை பார்க்கும் மற்றவர்களுக்கு மரணபயம் உடனே தொற்றிக்கொள்ளும் . ஸ்கர்வியை தடுக்கும் வைட்டமின் பற்றி அப்போது அவர்களுக்கு தெரியாது ஸ்கர்விக்கு உரிய மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை .

புதிய வெளிச்சம்
HMS Salisbury எனும் கப்பலில் பயணம் செய்த ஜேம்ஸ்லிண்ட் மருத்துவர் ஸ்கர்வியை மருந்துகளால் குணப்படுத்த முடியாது உணவு முறைகளாலே குணப்படுத்தமுடியும் என தீவிரமாக நம்பினார் . தன்னுடைய நம்பிக்கையை தீவிரமான எதிர்ப்புகளுக்கு இடையே செயல்படுத்தி பார்க்க துணிந்தார் . ஸ்கர்வி பாதித்த பனிரெண்டு பேரை இரண்டு இரண்டு பேராக கொண்டு ஆறு குழுக்கள் அமைத்தார்  அனைத்து குழுக்களுக்கும் ஒரே வகையான உணவினை கொடுத்தார் ஆனால் ஒவ்வொரு குழுவிற்கும் இணை உணவினை மாற்றி மாற்றி கொடுத்தார் அதாவது ஒரு குழுவிற்கு பூண்டுகலந்து  கொடுத்தார் மற்றொரு குழுவிற்க்கு வினிகர் கலந்து கொடுத்தார் மற்றொருகுழுவிற்கு கடுகு கலந்து கொடுத்தார் இது போல மாற்றி மாற்றி கொடுத்தார் ஆனால் ஒரு குழுவிற்கு மட்டும் ஆரஞ்சு பழங்களும் ,சிறிது எழுமிச்சை சாறும் கொடுத்தார்  . கப்பலில் உள்ள மாலுமிகளுக்கோ இவரின் செய்கைகள் பைத்தியகாரத்தனமாக தோன்றியது . உலகையே  அச்சுறுத்தும் ஒரு கொலைகார நோய்க்கு மருந்து தராமல் உணவு வகைகளை மாற்றி கொடுத்தால் நோய் குணமாகி விடுமா ?  என்று எள்ளி நகையாடத்தொடங்கினர். ஆனால் உணவு பொருள்களில் உள்ள ஏதோ ஒன்று ஸ்கர்வியை நிச்சயம் குணப்படுத்தும் என்ற நம்பி ஜேம்ஸ்லிண்ட் மாதக்கணக்கில் செய்த உணவு சோதனையில் ஆரஞ்சுபழமும் ,எழுமிச்சை சாறையும் உணவில் சேர்த்துக்கொண்ட குழு மட்டும் ஸ்கர்வியிலிருந்து விடுபட தொடங்கியது முடிவில் ஸ்கர்வி முற்றிலுமாக விலகியது . மற்றவர்கள் ஜேம்ஸை அதிசயமனிதராக பார்க்க தொடங்கினர்.

 நிராகரிப்பும் வேதனையும்
 1947 ஆம் ஆண்டு  ஜேம்ஸ் லிண்ட் எழுதிய “ A Treatise of the scurvy “ எனும் கட்டுரை ம மருத்துவ உலகையே திரும்பி பார்க்க வைத்தது . நோய்க்கு மருந்து தராமல் உணவு முறைகள் மூலம் நோயை குணமாக்கலாம் எனும்  புதிய  சித்தாந்தம் உருவானது ஆனால் இதை சில மருத்துவர்களும் ,விஞ்ஞானிகளும் நிராகரித்தனர் . அறிவியல் பூர்வமாக நிரூபணம் செய்யப்படாததால் ஜேம்ஸ்ஸின் உணவு முறை நிராகரிக்கப்பட்டது 1928 இல் ஆல்பர்ட் செந்கயோர்கி எனும் விஞ்ஞானி சிட்ரஸ்  வகை பழங்களான ஆரஞ்சு,எலுமிச்சை ஆகியவற்றில் இருந்து  வைட்டமி C யை பிரித்தார் இதன் குறைபாட்டால்தான் ஸ்கர்வி வருகிறது என்று ஜேம்ஸ்லிண்டின் கண்டுபிடிப்புக்கு அறிவியல் விளக்கம் கொடுத்தார் பின்புதான் உலகம் ஜேம்ஸ்லிண்ட்ன் சாதனைகளை புரிந்து கொண்டது .
வைட்டமின் பெயர் காரணம்
ஸ்கர்விக்கு அடுத்தபடியாக உலகை உலுக்கிய இன்னொரு நோய் பெரிபெரி இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் கை கால்களை அசைக்ககூட முடியாமல் மரண அவஸ்தைப்பட்டனர் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய போலந்து நாட்டைச்சேர்ந்த  பன்ங் என்ற விஞ்ஞானி பாலீஷ் செய்யாத அரிசியில் இருக்கும் ஏதோ ஒரு பொருள் உடலுக்கு சக்தி அளித்து பெரிபெரி நோயை குணமாக்கும் எனக்கண்டறிந்தார் அதற்கு VITAL+AMINE =VITAMIN என பெயரிட்டார் அதாவது வைடல்என்றால் உடலுக்கு இன்றிமையாததாக தேவைப்படும் பொருள் அமைன் என்றால் நைட்ரஜன் கலந்த பொருள்
யாருக்கு நோபல் பரிசு ?
உலகின் பல பகுதிகளில் உள்ள மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் வைட்டமின்களை பற்றி ஆராய்ச்சியில் இறங்கி புதிய கண்டுபிடிப்பு முயற்சியில் இறங்கினர் . வைட்டமின் கண்டுபிடிப்பிற்கான நோபல் பரிசுக்கு பன்ங்,கோல்டுபெர்கர்,எய்க்மென்,ஹாப்கின்ஸ்,கிறிஜின்,சுசூகி போன்றோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டான ஆனால்  எய்க்மென்,ஹாப்கின்ஸ் ஆகியோருக்கு 1929 ஆம் ஆண்டு வைட்டமின்கள் கண்டுபிடிப்பிற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது .வைட்டமின்களின் வகைகளைப்பற்றியும் அதன் நன்மைகளைப்பற்றியும் அடுத்த பதிவில் பார்ப்போம் .

டிஸ்கி
நேசம் மிகுந்த நொஞ்சங்களே சில தனிப்பட காரணங்களால் வலையுலகில் இருந்து சில மாதமாய் பதிவுகள் இட முடியவில்லை கவலைகளை புறந்தள்ளிவிட்டு  நெருப்பிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவையாய் எழுந்து மீண்டும் பதிவுலகிற்கு வந்துள்ளேன் உங்களின் ஆதரவு வேண்டுகிறேன்

Monday, 14 May 2012

செவ்வக நிலா

,

காதலி


ஐந்தரை அடியில்
படுத்து இருக்கிறது
செவ்வக நிலா


தீராமல் தவிக்கும் குரல்


எங்கிருந்தோ தீராமல்
தவிக்கும் பறவையின் குரலாய்
அலைகிறது உன்
நினைவுகள்


தொலைந்து போகும் வாழ்க்கை



பிரிவின் கடைசி வினாடியில்....
உன் இயலாமையின்
ஆறுதலுக்கு தெரியாது
காமத்தின் எச்சங்களில்
தொலைந்து போகும் வாழ்க்கை என்று

உன் நினைவை அள்ளி உயிரெங்கும் பூசிக்கொள்கிறேன்

,

நீ இல்லாத
பொழுதுகளின் வெம்மைகளில்
உன் நினைவை அள்ளி
உயிரெங்கும்
பூசிக்கொள்கிறேன்
உயிர்த்திருத்தலுக்கு
சகதியை தேடும் நண்டாய்

Saturday, 5 May 2012

மொபைல் மூலமாக பிளாகர், பேஸ்புக், ட்வீட்டர் தளங்களுக்கு தமிழில் உள்ளீடு செய்வது எப்படி ?

,
மொபைல் மூலமாக தமிழில் உள்ளீடு செய்வது எப்படி என்பது எனக்கு புதிராகவே இருந்தது ஆனால் எனது பிரச்சனையை நோக்கியா மொபைல் தீர்த்துவிட்டது . நோக்கியாவின் 2690 ,சி 1 போன்ற பல மொபைல்களில் பிளாகர், பேஸ்புக், ட்வீட்டர் தளங்களுக்கு தமிழ் உள்ளீடு செய்ய முடியும் ஆம் நண்பர்களே மொபைலில் ஒரு எளிய செய்கை மூலம் தமிழில் பதிவிடலாம், கருத்துரை வழங்கலாம், பேஸ்புக்,ட்வீட்டர் போன்றவைகளுக்கு தமிழில் உள்ளீடு செய்து வலையுலகை கலக்கலாம்

நண்பர்களே மொபைலில் ஓபரா பிரௌசர் இருந்தால் தமிழ் தளங்களை வாசிக்கலாம்
ஓபரா இன்ஸ்டால் செய்து தமிழ் தளங்களை
வாசிப்பது எப்படி என்ற எனது பதிவிடலை படிக்க இங்கே கீழ்கண்ட சுட்டியை இயக்குங்கள்

<http://www.nilanilal.blogspot.com/2011/06/blog-post_7760.html?m=1>



வாருங்கள் தோழர்காளே மொபைல்களில் தமிழை எப்படி உள்ளீடு செய்யலாம் என அறிந்து கொள்வோம்

உங்களது நோக்கியா மொபைலில் settings பகுதியில் language settings   என்பதை தேர்வு செய்யவும் அதில் தமிழ் இருந்தால் நீங்கள் தமிழில் உள்ளீடு செய்ய முடியும்

மொபைலில் ஓபரா பிரௌசர் மூலம் பிளாகர், பேஸ்புக், ட்வீட்டர் போன்ற தளங்களை திறந்து கொள்ளுங்கள் பின்பு உள்ளீடு செய்ய வேண்டிய இடத்திற்கு வாருங்கள் உங்களது மொபைலில் ஆங்கிலம் டீபால்ட்டாக உள்ளதால் ஆங்கிலத்தில் தான் உள்ளீடு செய்ய முடியும் .  எனவே இப்போது இடதுபக்கம் options  , என்பதில் writing options என்பதை தேர்வு செய்யவும் இப்போது கிடைக்கும் மெனுவில் தமிழ் என்பதை தேர்வு செய்யுங்கள் அவ்வளவுதான் இனி நீங்கள் தமிழில் உள்ளீடு செய்யலாம்
1  என்பது புள்ளி வைக்க
2  என்பது அ, ஆ ,இ,ஈ,உ,ஊ என்ற எழுத்துகளுக்கும் மேலும் ஒரு எழுத்தை அடித்துவிட்டு அதற்கு கொம்பு, கமா போடுவதற்கும்
3 என்பது எ,ஏ,ஐ,ஒ என்ற எழுத்துகளுக்கும் மேலும் ஒற்றை கொம்பு , இரட்டைக்கொம்பு போடுவதற்கும்
4 என்பது க,ங,ச,ஞ போடுவதற்கு
5 என்பது ட,ண,த,ஞ,ந போடுவதற்கு
6 என்பது ப,ம,ய போடுவதற்கு
7 என்பது ர,ல,வ போடுவதிற்கு
8 என்பது ழ,ள,ற,ன போடுவதிற்கு
9 என்பது ஜ,ஸ,ஹ போன்றவைகளுக்கு

நண்பர்களே மேற்கண்ட குறிப்புகளின்படி முதலில் தமிழில் மெஜேஜ் டைப் செய்து பழகவும் நீங்கள் தமிழில் விரைவாக டைப் செய்து பழகிவிட்டீர்கள்  என்றால் மொபைல் மூலமாக பிளாகர், பேஸ்புக், ட்வீட்டர் தளங்களுக்கு தமிழில் உள்ளீடு செய்யும் போது விரைவாக உள்ளீடு செய்ய முடியும் கையில் மொபைலும் இணைய இனைப்பும் உங்களிடம் இருந்தால் பதிவிடலாம் , ட்வீட்டலாம் , பேஸ்புக்கில் கருத்துரை வழங்கலாம் அப்புறமென்ன தோழர்களே வலையுலகே உங்கள் கைகளில் .

டிஸ்கி
நோக்கியாவின் விலை உயர்ந்த மொபைல்களிலோ, ஸ்மார்ட்போன்களிலோ தமிழை உள்ளீடு செய்ய முடியாது ஏன் எனில் writing options என்பதில் தழிழ் இல்லை
இது போன்ற பதிவினை ஏற்கனவெ யாராவது பதிவிட்டு இருக்கிறார்களா என  எனக்கு தெரியாது தற்செயலாக ட்வீட்டரில் ட்வீட் செய்யும் போது அறிந்து கொண்டேன் எனக்கு தெரிந்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். பயன்படுத்திபார்த்துவிட்டு கருத்துரை கூறவும்

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates