Sunday 22 April 2012

இயற்கை சலைன் (குளுகோஸ்) எது தெரியுமா ?

,
இரண்டாம் உலகப்போரின் போது சலைன்(குளுகோஸ்)  கிடைக்காத போது பல்லாயிரக்கணக்கானவர்களின்  உயிரை காப்பாற்றிய  இயற்கை சலைன் எது  தெரியுமா ? நாம்  தாகம் தணிக்க அருந்தும் இளநீர் தான்  அது . 

இளநீரில் அதிகளவு பொட்டாஷியம் உள்ளது  மேலும் வைட்டமின் B , வைட்டமின் C , போன்றவைகளும் உள்ளது .
பழங்காலங்களில்  மக்களுக்கு  மரணபயத்தை கொடுத்த  அம்மைநோயிலிருந்து மக்களை காத்தது  இளநீர் ஆகும். மேலும் சிறுநீர் ஒழுங்கிற்கும் , சிறுநீரகக் கற்களை  கரைப்பதற்கும்  , மஞ்சள் காமலையை போக்குவதற்கும்  இளநீர் அருமருந்தாகும் .
அவசர காலங்களில்  ஒருவருக்கு குளுகோஸ் ஏற்றவேண்டும் என்ற நிலையில்  குளுகோஸ் கிடைக்காத போது தகுந்த மருத்துவரின் உதவி இருந்தால்  குளுக்கோஸுக்கு மாற்றாக  சுத்தமான இளநீரை  பயன்படுத்தலாம்

0 comments to “இயற்கை சலைன் (குளுகோஸ்) எது தெரியுமா ?”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates